சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

16 February 2010

ஒரு கணவனின் டைரி குறிப்பு..!!!

















ஒவ்வொரு புருஷனும்
தவிர்க்க நினைக்கிற - ஆனா
தவிர்க்கவே முடியாத விஷயம்
என்ன தெரியுமா..?

மனைவியோட சொந்தக்காரங்க
கல்யாணம்..!

" நான் வரலை.,
நீ மட்டும் போயிட்டு வான்னு..! "
சொன்னாலும்., விடமாட்டாங்க.

என்னமோ., நாம வரலைன்னா
மாப்பிள்ளை தாலியே
கட்டமாட்டேன்னு
ஒத்தை கால்ல நிக்கிற மாதிரி..!

( நாம என்ன அய்யரா..? )

அங்க கல்யாணத்துக்கு போனதும்
" அக்கா., மாமா., அத்தைன்னு..! "
கும்பலா கூடி கும்மி அடிக்க
இவங்க போயிடுவாங்க.

நம்ம நிலைமை..?

சட்டசபைக்கு போன
சுயேச்சை MLA மாதிரி
ஒரு ஓரமாதான் இருக்கணும்..!

இது கூட பரவாயில்லை..!

சின்ன குழந்தைங்களை
கூட்டிட்டு போயிட்டா.,
இன்னும் Super..!

அதை பார்த்துக்க ( மேய்க்க )
சொல்லி நம்மகிட்ட விட்டுட்டு
போயிடுவாங்க..!

வீட்டுல இருந்திருந்தாலாவது
Tv-ல பழைய Cricket Match Highlights
பார்த்துட்டு இருந்திருக்கலாம்..,

இதுக்கு என்னதான் வழி..?

எனக்கு தெரிஞ்சி ஒரே வழி தான்
இருக்கு..!!

அது........,

ஒன்னு., ரெண்டு சகலை
இருக்கிற வீடா பார்த்து
பொண்ணு கட்டிக்கோங்க..!

" சகலை உடையான்..,
கல்யாணத்துக்கு அஞ்சான்..! "


டிஸ்கி : " சூப்பர் கம்பெனி " பதிவுக்கு
திரும்பி செல்ல க்ளிக் Here..
.
.

18 Comments:

Anonymous said...

அய்யோ அய்யொ எப்படி சொல்வதென்றே தெரியலையே...அப்படி ஒரு அப்பட்டமான சத்தியமான உண்மையை புட்டு புட்டு எழுதி இருக்கிறாரே..எத்தனைபேர் படும் பாடு...யாராவது தைரியமாக எழுதுகிறார்களானு பார்தேன் எழுதியே விட்டார் திரு வென்கட்...வாழ்க உங்கள் தொண்டு... அனுபவபட்டோர் அத்தனைபேருக்கும் ஆருதலாக...அவர்களின் சார்பில்... படிச்சிட்டிங்கள்ள... கடைசியாக சொன்னதை கொஞ்சம் யோசித்து கொள்ளுங்கள்.

Anonymous said...

இன்று ஒரு தகவல்....

"சகலை உடையான்..,
கல்யாணத்துக்கு அஞ்சான்..! "

அமுதா கிருஷ்ணா said...

உங்களுக்கு எத்தனை சகலை...

வெங்கட் said...

--> நம்மள மாதிரி பாதிக்கபட்டவங்க
நிறைய பேர் இருப்பாங்க போல தெரியுதே...!

---> எனக்கு ஒரே ஒரு சகலை..

சுந்தரா said...

பாவம், ரொம்பத்தான் பாதிக்கப்பட்டிருக்கீங்க :)

Sen22 said...

//" சகலை உடையான்..,
கல்யாணத்துக்கு அஞ்சான்..! " //

Super..!!
I'll try..

Senthil,
Bangalore.

Padhu said...

very nice.. But am unlucky.. naan feel panradha(pannadha) apdiye potrikiye!! idhukku peru dhaan telepathy(sagalapathy)!!!!

ManA © said...

ha ha haa..paawam neenka sory " கணவrkal" :-D

வெங்கட் said...

போற போக்க பார்த்தா
ஒரு பொண்ணு இருக்கிற வீட்டுல
யாருமே கல்யாணம் பண்ண மாட்டாங்க
போல இருக்கே..??!!

பெண் பாவம் பொல்லாதது ஆச்சே..!!!

Anonymous said...

sagallai

we r join together muchi

manivannaraj

Manish said...

good

வெங்கட் said...

வாங்க மணிவண்ணராஜ்..!
நீங்களும் நம்ம ஆளு தானா..?

---> நன்றி மனிஷ்..!

Unknown said...

independent MLA ..its good timing sense there ! good keep it up !

வெங்கட் said...

நன்றி ராஜ்..,
உங்க பாரட்டுக்கு நன்றி..

cheena (சீனா) said...

கல்யாண வூட்ல சுயேச்சை எம் எல் ஏயா - பழகிப் பாக்க வேண்டியது தானே - எவ்ளோ பேரு இருக்காங்க மண்டபத்துல - ம்ம்

ஆனா உங்க சொந்தக்காரங்க கல்யாணத்துக்கௌ அவங்க வாராங்களா - ஒன்ணுமே சொல்றது இல்லையா-

வெங்கட் said...

சீனா சார்..,
கல்யாண மண்டபத்துல நிறைய
சுயேட்சை MLA இருக்காங்கன்னு
சொல்லுறீங்க..
அப்படி தானே..?

Anonymous said...

Eanpa unga vettu kalyanatthukku unga manaivi vara mattangala rombathan sadanjukkureengale

வெங்கட் said...

பெயரில்லா..,
இது " கணவனின் டைரி குறிப்பு "..
நீங்க சொன்னதை பத்தி என் மனைவி
" மனைவியின் டைரி குறிப்புல "
எழுதுவாங்க...
Take it Easy Yaa...!