சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

26 March 2012

இது எந்த ஊரு Dictionary..?? Part - 3


* மூட நம்பிக்கை : " Allout " போட்டால் கொசு
வராது என்று நம்புவது.


* Beauty Parlour : அழகான பெண்களை.,
சுமாரானவர்களாக மாற்றும் இடம்..!


* பிளாக்கர் : பதிவு போடும் அன்னிக்கு ( மட்டும் )
மற்றவர் பிளாக்குக்கும் போயி கமெண்ட் ,
ஓட்டு போடுபவர்.!


* கூட்டணி கட்சி : தேர்தலுக்கு பிறகு முதல் எதிரி


* இடைதேர்தல் : கம்மியா கரண்ட் போகும்
தொகுதியில் நடப்பது.


* சிகப்பழகு க்ரீம் : சிகப்பான பொண்ணுக்கு
கருப்பான மேக்கப் போட்டு விளம்பர படம்
எடுக்கும் கம்பெனி.



பின் டிஸ்கி :  நம்ம ப்ளாக்ல 400வது பாலோயராத்தான்
சேரணும்னு 6 மாசம் வெயிட் பண்ணி இன்னிக்கு
கரெக்ட்டா 400வது Follower-ஆ Join பண்ணின
கஸ்தூரி அவர்களின் கடமை உணர்ச்சியை
பாராட்ட வார்த்தைகளே இல்லை..

.
.

20 March 2012

சச்சின் 100-வது சதம் ( Behind the Scene )

சச்சின் 100வது செஞ்சுரி
அடிக்காத வரை " இப்ப அடிப்பாரா.? " ,
"அப்ப அடிப்பாரான்னு.? "
அதை பத்தியே பேசிட்டு இருந்தாங்க..

ஆனா அடிச்சப்புறம்..

" ப்பூ.., போயும் போயும்
பங்களாதேஷ்கிட்ட தானே அடிச்சார்னு "
இளக்காராம பேசறாங்க..

என்ன பண்றது.. அந்த மேட்ச்க்கு
முன்னாடி தானே அவரு எனக்கு
போன் பண்ணி Tips கேட்டாரு..
நானும் குடுத்தேன்..!

அந்த Tips-ஐ ஏன் அதை ஆஸ்திரேலியாவுல
இருக்கும் போது குடுக்கலைன்னு
நீங்க குறுக்கால பூந்து கேக்க வர்றது
எனக்கு புரியுது..

என்ன பண்றது.. அப்ப என் போன்ல
Balance இல்லயே..

" Incoming Attend பண்றதுக்கு எதுக்கு
Balance-னு.? " அடுத்த கேள்வி
கேப்பீங்களே.. தெரியும்..!!

சச்சின் எப்பவும் எனக்கு
மிஸ்டு கால் தான் குடுப்பாரு..
நான் தான் திருப்பி கூப்பிடுவேன்..
போதுமா.. உஸ்ஸப்பா....

ம்ம்.. அப்புறம் சச்சினுக்கு நான் குடுத்த
Tips ரொம்ப ரகசியமானது. வெளில
சொல்லக்கூடாது.. அதனால இங்கே
Bracket-ல போடறேன்..

( " உங்க ஹெல்மெட்ல BCCI Logo
முக்கால் இஞ்ச் தள்ளி இருக்கு.. அதை
ஒரு இஞ்ச் தள்ளி ஒட்டிக்கோங்க..! " )

ஏன் எல்லோரும் என்னை முறைக்கற
மாதிரியே பார்க்கறீங்க..?

ஓ... சந்தேகமா இருக்கா...?

அப்ப சச்சின் செஞ்சுரி அடிச்சப்புறம்
என்ன பண்ணார்னு நீங்களே பாருங்க...






அப்புறம் முந்தா நேத்து நம்ம
கோலி கூட போன் பண்ணியிந்தாப்ல..
( ஹி., ஹி., ஹி..!)
.
.

12 March 2012

தடுப்பூசி... நடுக்கமூட்டும் உண்மைகள்..!!


டிஸ்கி : ஜூனியர் விகடனில் ( 4.5.2008 )
வெளிவந்த டாக்டர் புகழேந்தி அவர்களின் பேட்டி..

தட்டம்மை தடுப்பூசி விநியோகம் இந்தியா முழுவதும்
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில்,
உண்மையில் இந்த தடுப்பூசிகள் நோயை தடுக்கின்றனவா..?
இல்லை உண்டு பண்ணுகின்றனவா என்ற திடுக்கிடும்
கேள்வி மக்களின் மனங்களை கலவரப்படுத்தி இருக்கிறது

" மக்களின் சந்தேகம் 100% நியாயமானது. இன்றைய
சூழலில் தடுப்பூசிகள் நோயை தடுக்கும் என்பதே மாயை.
அதற்கு உலக அளவிலான உதாரணங்களே சாட்சி.
மருந்து சந்தையின் பணம் காய்க்கும் மரமாக இருக்கும்
தடுப்பூசிகள் பற்றி இப்போதாவது மக்கள் விழிப்புணர்வு
பெறவேண்டும்" என்று எச்சரிக்கை குரலில் பேசுகிறார்
மருத்துவர் புகழேந்தி.

சென்னை அருகேயுள்ள கல்பாக்கத்தை சேர்ந்த புகழேந்தி,
சூழல் பாதுகாப்புக்கான மருத்துவர்கள் குழுவின் உறுப்பினர்.
மருத்துவ உலகில் நடக்கும் தில்லுமுல்லுகளை அந்த துறைக்குள்
இருந்துகொண்டே துணிச்சலாக வெளிப்படுத்தி வருபவர்.
அவரை சந்தித்தோம்..

" தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கம் நிச்சயம் தவறாக
இருக்கப் போவதில்லை. ஆனால், இப்போது தவறான
நோக்கத்துடன் முன்னிலைப்படுத்தபடுகிறது. தடுப்பூசி
போட்டுக்கொள்வது ஒன்றுதான் இந்த பூமியில் பாதுகாப்பாக
வாழ்வதற்கான ஒரே வழி என்ற எண்ணம் மக்கள் மனதில்
திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்,
தடுப்பூசிக்கான சந்தையை உலக அளவில் விஸ்தரித்துள்ளனர்.

சுகாதாரமான உணவு, வசிப்பிடம், தண்ணீர் போன்றவையும்,
நல்ல நோய் எதிர்ப்பு சக்தியும்தான் எந்த ஒரு நோயையும்
தடுக்க முடியும். அதுதான் இயற்கையின் விதி. செயற்கையாக
உருவாக்கப்படும் மருந்துகள் அதை செய்ய முடியாது.

இதுவரைக்கும் தடுப்பூசிகள் எந்த நாட்டிலும்,
எந்த காலகட்டதிலும் முற்றுமுதலாக எந்த ஒரு நோயையும்
தடுத்ததில்லை. உலக அளவில் அதிகமாக போடப்படும்
போலியோ, அம்மை ,மஞ்சள் காமாலை தடுப்பூசிகளிலும்
இதுதான் உண்மை நிலவரம்.

அம்மை நோய்க்கான தடுப்பூசியை 1796-ல் எட்வர்ட் ஜென்னர்
என்பவர் கண்டறிந்தார். அந்த ஊசியை தன்னுடைய மகனுக்கும்,
இன்னொருவருக்கும் கொடுத்து சோதித்து பார்த்தார்.
தன் மகனென்றும் பாராமல் அந்த கொள்ளை நோய்க்கு
ஒரு மருந்து கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற
தியாக உணர்வில் அதை செய்தார்.

அந்த மருந்து, மருத்துவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் மருந்தின் வீரியத்தால் சில வருடங்களில் அவர் மகன்
உள்பட இருவருமே இறந்து போனார்கள். இதனால்
எட்வர்ட் ஜென்னர் தன்னுடைய இரண்டாவது மகனுக்கு
அம்மை தடுப்பூசி போடவில்லை.. ஆரம்பம் மட்டுமில்ல..
அதன்பிறகான வரலாறும் இப்படித்தான் உள்ளது.

1989-ம் ஆண்டில் அமெரிக்க பள்ளிக்குழந்தைகள் அனைவருக்கும்
அம்மை தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு இருந்தது.ஊசி போட்ட
பிறகு C.D.C ( Centre for Desease Control ) எனப்படும்
அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பு நடத்திய
ஆய்வில் 98% குழந்தைகளை அம்மை நோய் தாக்கியிருந்தது.
இது, ஊசி போட்டதற்கு முன்பு இருந்த சதவிகிதத்தை விட
மிக அதிகம். உலகின் பல நாடுகளில் இதே நிலைதான்.

அம்மை தடுப்பூசியால் அந்த நோய் வருவதை தடுக்க
முடியவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, அது மூட்டுவலி,
வலிப்பு போன்ற வேறு சில நோய்களையும் தூண்டிவிடுகிறது
என்ற தகவல் இன்னும் அதிர்ச்சியானது.

இங்கிலாந்தில் வருடம் ஒன்றுக்கு 30 ஆயிரம் பேர்
வலிப்பு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 10 ஆயிரம் பேர்
அம்மை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். இதை நான்
சொல்லவில்லை , " பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் " சொல்கிறது.

உடலுக்குள் இருக்கும் நோய்க்கிருமிகளுக்கு எதிரான புரதத்தை
தூண்டிவிடுவதற்காக, அதே கிருமியை அதை நோய் தாக்கும்
திறனை குறைத்து உடம்புக்குள் செலுத்துவது தான் அம்மை
தடுப்பூசி. உடலுக்குள் செலுத்தப்படும் அந்த கிருமியை
எல்லோருடைய உடலும் ஏற்றுக்கொள்வதில்லை. அது
ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தது.

இந்தியா போன்ற வளர்ந்துவரும் மற்றும் ஏழை நாடுகளின்
சிறுவர்கள் சத்து குறைப்பாட்டுடன்தான் இருக்கிறார்கள்.
அவர்களின் உடம்பு இந்த தடுப்பூசியின் கிருமிகளை
தாங்கும் சக்தி படைத்ததாக இருப்பதில்லை. அத்தகைய
சூழலில்தான் , தடுப்பூசி போடப்பட்ட நோக்கத்தின்
எதிர்திசையில் அம்மை நோயும், வேறு நோய்களும்
வருகின்றன.

அதேபோல மத்திய மற்றும் தமிழக அரசுகளால்
மஞ்சள் காமாலை தடுப்பூசிக்கு அதிக முக்கியத்துவம்
கொடுக்கப்படுகிறது. இந்த நோய் 100 பேரை தாக்குகிறது
என்றால், அதில் 95 பேருக்கு நோய் தாக்கியிருப்பது
உடனடியாக தெரிந்துவிடுகிறது. மீதி 5 பேருக்கு மட்டுமே
தாமதமான அறிகுறிகள் தென்படுகிறது.

அந்த 95 பேரிலும் 94 பேர், சராசரியான உணவுக் கட்டுப்பாடுகள்
மூலமாகவே இயல்பு நிலைக்கு திரும்பிவிடுகின்றனர். மீதமுள்ள
ஒரு சதவிகிதம் பேருக்கு மட்டுமே இறப்பு ஏற்படுகிறது.
ஆனால் அரசோ இது ஒரு ஆட்கொல்லி நோய் என்ற தோற்றம்
உருவாகும் வகையில் கோடிக்கணக்கான ரூபாய் நிதியை வாரி
இறைக்கிறது.

அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும்
மஞ்சள் காமாலை தடுப்பூசி போடுவது கட்டாயம் என்ற
சட்டம் 1997-ல் நீக்கப்பட்டுவிட்டது.கர்ப்பிணிப் பெண்களுக்கு
மஞ்சள் காமாலை இருந்தால் மட்டுமே, பிறக்கும் குழந்தைக்கு
அந்த தடுப்பூசி போடவேண்டும் என்பதாக அது மாற்றியமைக்கப்பட்டது.

தேவைக்கதிகமான உற்பத்தி செய்திருந்த மருந்துகளை
என்ன செய்வது எனத் தெரியாமல் அந்நாட்டு மருந்து கம்பெனிகள்
திணறி நின்ற சமயத்தில்தான், பில்கேட்ஸின் கரிசனம்
இந்தியாவின் மீது திரும்பியது. ஆந்திர மாநிலத்தின்
4.5 லட்சம் குழந்தைகளுக்கு, பில்கேட்ஸ் தனது ஃபவுண்டேஷன்
மூலமாக மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டார்.

அதற்கான மருந்து அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டது.
உண்மையில் மஞ்சள் காமாலைக்கு அமெரிக்காவை விட
தரமான, விலை குறைந்த மருந்து இந்தியாவிலேயே கிடைக்கிறது.

மஞ்சள் காமாலை பற்றி இந்த அளவு பூதாகாரப்படுத்தி,
ஏன் மக்களின் மனதில் பீதியை ஏற்படுத்த வேண்டும்.?
அம்மை தடுப்பூசி போலவே மஞ்சள் காமாலை தடுப்பூசியையும்
எல்லோருடைய உடல்நிலையும் ஏற்றுக்கொள்வதில்லை.

அப்படி தேவையில்லாமல் கொடுக்கப்படுவதால் வலிப்பு, ஜன்னி,
கண்பார்வை பாதிப்பு, மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட 13 வகையான
நோய்கள் வருகிறது என்கிறது 1997-ல் அமெரிக்க அரசால்
நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

முக்கியமாக குறைப்பிரசவத்தில் பிறக்கிற , சத்து மற்றும்
எடைக் குறைவால் பாதிக்கப்பட்ட, ரத்தசோகை தாக்கிய,
அதிக சளித்தொல்லை இருக்கிற குழந்தைகளுக்கு
மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்பட்டால்.. அது
எதிரான விளைவுகளையே அதிகம் ஏற்ப்படுத்தும்.

ஆனால் நமது அரசோ, மஞ்சள் காமாலை தடுப்பூசியை
ஏதோ காம்ப்ளான் கொடுப்பதுபோல எல்லோருக்கும்
கொடுத்து கொண்டிருக்கிறது. இதற்க்குப் பதிலாக
கருவுற்ற அனைத்து பெண்களுக்கும் இலவச
மஞ்சள் காமாலை சோதனையை செய்யலாம்.
அதில் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைக்கு மட்டுமே
தடுப்பூசி போடலாம்.

போலியோ தடுப்பு மருந்துக்கும் இதே போன்ற அதிர்ச்சி
வரலாறு இருக்கிறது. இதில் ஊசி, சொட்டு மருந்து என
இரு வகை உள்ளது. ஊசியில் உயிரற்ற கிருமிகள் இருக்கும்.
சொட்டு மருந்தில் உயிரோடு உள்ள கிருமிகள் இருக்கும்.

உயிரற்ற கிருமிகளைக் கொண்ட ஊசியால் பெரும்பாலும்
பிரச்னை வருவதில்லை.அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில்
இது தான் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் நம் ஊரில் அரசு
முழுக்க முழுக்க சொட்டு மருந்தை மட்டுமே வழங்குகிறது.
இது ஆபத்தானது. சம்பந்தப்பட்ட உடம்பு அந்த மருந்தை
ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அது போலியோவை
ஏற்படுத்தும், உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தும்.

போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்.
" அமெரிக்காவில் 1961-க்குப் பிறகு ஏற்ப்பட்ட அனைத்து
போலியோவுக்கும் போலியோ சொட்டு மருந்துதான் காரணம்"
என்று அமெரிக்க செனட் கமிட்டியில் வாக்குமூலம்
அளித்திருப்பதே இதற்கு சாட்சி.


டாக்டர் புகழேந்தி முன்வைக்கும் உதாரணங்கள் :

1. 1995-ம் வருடம் அமெரிக்க அழகி பட்டம் வென்றவர்
Heather Whitestone. சில ஆண்டுகளில் காது கேளாமை
நோயால் பாதிக்கப்பட்டார். அதற்கு மருத்துவர்களால்
சொல்லப்பட்ட காரணம் DPT எனப்படும் முத்தடுப்பூசி.

2. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி ,
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவை சேர்ந்த
கறுப்பின மற்றும் லத்தின் அமெரிக்க குழந்தைகள்
1500 பேருக்கு 1989-க்கும், 91-க்கும் இடைப்பட்ட
ஆண்டுகளில் அம்மை நோய் த்டுப்பூசி செலுத்தப்பட்டது.

இதே ஊசி, இதே காலகட்டத்தில் பல ஆப்பிரிக்க நாட்டு
குழந்தைகளுக்கும் போடப்பட்டது. இது அந்தக் குழந்தைகளின்
பெற்றோருக்கே தெரியாமல் நடத்தப்பட்டது. அதுவரைக்கும்
அம்மைத் தாக்குதலையே கண்டிராத அவர்கள், அந்த ஊசியின்
விளைவால் பலவிதமான உடல் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
பலர் இறந்தும் போனார்கள். பலத்த எதிர்ப்புக்கு பிறகு
உலக சுகாதார நிறுவனம் அந்த மருந்தை சந்தையிலிருந்து
விலக்கிக் கொண்டது.

3. போலியோ சொட்டு மருந்தானது, குறிப்பிட்ட ஒரு வைரஸை
குரங்கின் சிறுநீரகத்தில் வைத்து வளர்த்து எடுத்து, பின்னர்
நோய் தடுப்பு மருந்தாக உருவாக்கப்படுகிறது.

குரங்குகள் உரிய சோதனைகளுக்கு பிறகு தான்
தேர்தெடுக்கப்படுகின்றன என்றாலும்.,1950-களில் ,
இந்த மருந்து தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட குரங்குளை
சிமியன் வைரஸ் 40 ( SV 40 ) என்ற வைரஸ் கிருமி
பாதித்திருந்தது. இந்த வைரஸ் , பல வருடங்கள் கழித்து
மூளை, ஈரல், நுரையீரல் போன்ற இடங்களில் புற்றுநோயை
ஏற்ப்படுத்தும் திறன் கொண்டது. இதனால் இந்த மருந்து
செலுத்தப்பட்டவர்கள் பெரியவர்களான போது அவர்களில்
பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.

இவற்றை எல்லாம் வைத்துக்கொண்டு தடுப்பூசிகளே
வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அது ஒரு
எல்லை வரைக்குமே நோய் வராமல் தடுக்கிறது.
மருந்து கம்பெனிகளும், அரசும் சொல்வது போல
அது ஒன்றும் சர்வரோக நிவாரணி அல்ல.

ஒரு நபருக்கு தடுப்பூசியைப் போடலாமா? வேண்டாமா.?
என்பதை அவருடைய உடல்நிலையைக் கருத்தில்
கொண்டு முடிவு செய்ய வேண்டும். அதே போல
ஒரு தடுப்பூசியை ஒரு நபருக்கு போடுவதற்கு முன்பு,
அதன் சாதக பாதகங்களை சம்பந்தப்பட்டவருக்கு
சொல்வது மருத்துவரின் கடமை.

இதையெல்லாம்விட சிறந்த வழி, சுகாதாரமான,
சுத்தமான வாழ்க்கை முறையை பின்பற்றி,
தடுப்பூசிகள் தேவைப்படாத ஒரு சூழ்நிலையை
உருவாக்கிக்கொள்வது தான்.

ஆபத்துக்கள் நிறந்த தடுப்பூசிகளா.? ஆபத்தில்லா
சுகாதாரமான வாழ்க்கை முறையா.? எதற்கு
முன்னுரிமை என்பதை மக்கள் தான் முடிவு
செய்ய வேண்டும்.அதற்கேற்ற விழிப்பு உணர்வை
அரசாங்கம் அவர்களுக்கு உருவாக்க வேண்டும்.
என்றார் புகழேந்தி..

எச்சரிக்கை விடுபவர் பொறுப்பான ஒரு மருத்துவர்.
கோடிக்கணக்கில் பணத்தையும் பல ஆயிக்கணக்கான
சுகாதாரத்துறை ஊழியர்களையும் வைத்து நடத்தும்
தடுப்பூசி முகாம்கள் குறித்து மறுபரிசீலனை செய்யும்
நேரம் வந்துவிட்டதா..?

நன்றி : டாக்டர் புகழேந்தி MBBS, ஜூனியர் விகடன்.

மேலும் அதிக தகவலுக்கு :




Read More @ :