சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

16 December 2013

நம்ம ரேஞ்சே வேற...!!!


என் பையன் ஸ்கூல்ல Parents-க்கு
Craft Making Competition நடந்தது..

அதுல கலந்துகிட்ட என் Wife
Top 15-ல செலக்ட் ஆகிட்டாங்க..

Function-ல சேலம் கலெக்டர் வந்து
பரிசு தரபோறார்னு சொன்னாங்க..

இன்னிக்கு என் Wife கலெக்டர் கையால
பரிசு வாங்க போறாங்க...

அதுக்கு காரணம் நாம பண்ணின
ஹெல்ப் தான்னு நினைக்கும் போது
எனக்கு பெருமையா இருந்தது..

( Competition-ல கலந்துக்க நான் தான்
வண்டில கூட்டிட்டு போனேன்.. .
ஹி., ஹி., ஹி..!! )

Function 4 மணிக்கு.. நாங்க 3.45-க்கே
போயிட்டோம்.. ஆனா அப்பவே
ஆடிடோரியம் நிறைஞ்சி போச்சு..

பரிசு வாங்கறதால என் Wife-ஐ மட்டும்
முன்னாடி கூட்டிட்டு போயிட்டாங்க..

சரி விடு.. நம்மளது தான் ஜூம் கேமரா
ஆச்சே.. இங்கே இருந்தே போட்டோ
எடுத்துக்கலாம்னு கிடைச்ச சீட்ல
உக்காந்துகிட்டேன்..

டைம் ஆக ஆக கூட்டம் இன்னும்
ஜாஸ்தி ஆகிடுச்சு...

4.30 மணி வாக்கில சேலம் கலெக்டர்,
பிரின்சிபால் எல்லாம் ஹாலுக்கு
வந்தாங்க..

அப்ப நான் முன்னாடியே இருந்ததால
பிரின்சி சாருக்கு ஒரு வணக்கம்
வெச்சேன்... அவரும் லைட்டா ஸ்மைல்
பண்ணிட்டு போனாரு..

கொஞ்ச நேரத்துல ஸ்கூல் ப்யூன்
என்கிட்ட ஓடி வந்தாரு..

" சார்.. சார்.. உங்களை பிரின்சிபால் சார்
முன்னாடி வர சொல்றாரு..! "

( எனக்கு ஆச்சரியம்..!! நம்மள எதுக்கு
முன்னாடி வர சொல்றாரு.. சீப் கெஸ்டும்
வந்துட்டாங்களே... ஒரு வேளை பிரின்சி
நம்ம BLOG ரசிகரா இருப்பாரோ..?!!! )

" கூட்டமா இருக்கேங்க...!! "

" என்கூட வாங்க சார் நான் கூட்டிட்டு
போறேன்..! "

" சரி வாங்க போலாம்..!! "

ரெண்டு பேரும் ஸ்டேஜை நோக்கி
போனோம்... கூட்டமா மத்த Parents
வழில நின்னுட்டு இருந்தாங்க...

அப்ப அந்த ப்யூன்...

" எல்லோரும் கொஞ்சம் வழிவிடுங்க..
போட்டோகிராப்பர் வர்றாரு....!! "

" என்னாது போட்டோகிராப்பரா...?!!
அவ்வ்வ்வ்..!!! "
.
.

13 December 2013

டு இன் ஒன்..!!

எனக்கு சாதாரணமா கோவம் வராது....
வந்துட்டா அவ்ளோதான்...

இன்னிக்கு காலையில....

" நிர்மலா..!! நிர்மலா..!!! "

" அடடடா.. ஏன் இப்படி கரடி மாதிரி
கத்தறீங்க..?!! "

" யேய்.. கரடி இப்படித்தான் இனிமையான
வாய்ஸ்ல கத்துமா..?! "

" சாரிங்க.. அன்னிக்கி அனிமல் ப்ளேனட்ல
இதே மாதிரி எதோ கத்திட்டு இருந்தது...
அப்ப அது  கரடி இல்லையா...?!! "

" பிச்சிபுடுவேன் பிச்சி.... "

" சரி, சரி இப்ப எதுக்கு கூப்பிட்டீங்க..?! "



" உனக்கு எத்தனை தடவை சொல்லி
இருக்கேன்.. என் ஷேவிங் க்ரீம் கலர்ல
பேஸ்ட் வாங்கதேன்னு... "

" அதுக்கு என்ன இப்போ...? "

" மாறி போச்சு.... "

" இதுக்கு தான் எப்பவும் Facebook-ல
ஸ்டேடஸ் போடற நெனப்பாவே
இருக்க கூடாதுன்னு சொல்றது.. "

"ஏய்.. நான் என்ன கேட்டுட்டு இருக்கேன்..
நீ என்ன சொல்லிட்டு இருக்க.. "

" சரி., சரி., ஒரு நாள் பேஸ்ட்டை  வெச்சு
ஷேவிங் பண்ணிட்டீங்க.. விடுங்க..
விடுங்க... "

" ஹி., ஹி., ஹி... அப்படி பண்ணியிருந்தா தான்
பரவாயில்லையே... "

" அப்படின்னா...????!! அட பாவி மனுஷா...!! "
.
.

05 December 2013

ஆதார்ர்ர்ர்ர்ர்...!!!


பேங்க்ல புதுசா ஒரு அக்கவுண்ட் ஓபன் 
பண்ண போனப்ப... 

" எங்கே உங்க ஐடி ப்ரூப் குடுங்க...! "

உடனே நானு என் " ஆதார் அட்டை"-ஐ 
குடுத்தேன்..

" இந்தாங்க...! "

வாங்கினவன்.. 

கார்டை பார்த்தான்... 
என்னை பார்த்தான்.. 

பாத்துட்டு...

" இந்த போட்டோல இருக்கறது 
நீங்கதாங்கறதுக்கு வேற எதாவது 
ஆதாரம் இருக்கா..?!! "

" டேய்ய்ய்ய்ய்ய்.................!!! "

.
.

27 November 2013

" சச்சின் " - ஒரு சின்ன Intro...!!



நேத்து என் ப்ரெண்ட் சுரேஷ்
மெடிக்கல்ஸ்ல நானும், அவனும்
கிரிக்கெட் பத்தி பேசிட்டு இருந்தோம்..

பேச்சு சூடு பிடிச்சு., கார சாரமா
போயிட்டு இருந்தது..

பக்கத்துல ஒரு மெடிக்கல் ரெப் வேற
இருந்தாரு... நாங்க பேசறதை
சுவாரசியமா கேட்டுட்டு இருந்தாரு..

ஒரு கட்டத்துல நான்...

" ஹே.. கிரிக்கெட்ல நீதான் பெரிய ஆளுன்னு
அலட்டிக்காதே.. உனக்கு சச்சினை Introduce
பண்ணி வெச்சது யாரு..? அது ஞாபகம்
இருக்குல்ல...!! "

இதை கேட்டதும் அந்த ரெப் ஷாக் ஆகிட்டார்...

" என்ன சார் சொல்றீங்க..? நிஜமா..? "

" நிஜமா இல்லையானு அவனையே
கேளுங்கனு " சுரேஷை கை காட்டினேன்..

அவனும் " ஆமாம் " தலை ஆட்டினான்..

இப்ப அந்த ரெப்க்கு என் மேல மரியாதை
பல மடங்கு கூடி போயிருந்தது அவர்
முகத்துல தெரிஞ்சது..

அவர் என்கிட்ட ரொம்ப பவ்யமா..

" சார்.., சார்.., எப்ப சார் சச்சினை பாத்தீங்க..?
எப்படி Introduce பண்ணுனீங்க..?!! "

" அது வந்து... 1989-னு நினைக்கிறேன்..
ரஞ்சி டிராபி மேட்ச்... "

" ம்ம்..!! "

" நாங்க டிவில மேட்ச் பாத்துட்டு
இருக்கும் போது சொன்னேன்...

இவர் தான்டா சச்சின்..! "

ஆமா இப்ப நான் என்ன தப்பா
சொல்லிட்டேன்.. எதுக்கு அந்த ரெப்
என்னை அப்படி முறைக்கறான்..?!!
.
.

23 November 2013

நூடுல்ஸ் Vs ஃபுல் மீல்ஸ்

மணி : 2 மணி...
இடம் : சரவண பவன் ஹோட்டல்

எனக்கு பசி வயித்தை கிள்ளுது..
அங்கே பாத்தா செம கூட்டம்.., 
உக்கார இடமே இல்ல.. 

சரினு.. சுத்தி முத்தி பார்த்தேன்... 

2a + 2b = 4c

ஹி., ஹி., ஒண்ணுமில்ல... 
யார் பர்ஸ்ட் எந்திரிப்பாங்கனு 
என் மனசு கணக்கு போடுது...!!

அப்படி நான் அலசி ஆராஞ்சி 
நான் ஒரு முடிவுக்கு வந்து போயி 
நின்னது 3வது டேபிள் பக்கத்துல..

அங்கே சாப்பிட்டுட்டு இருந்தது 
ஒரு பொண்ணு... 

இப்ப எதுக்கு எல்லோரும் மனசுக்குள்ள 
சிரிச்சிக்கறீங்க.. Very Bad-ங்க நீங்க..!

அதுக்கு என்ன காரணம்னா.. 

அங்கே எல்லோரும் புல் மீல்சை
ஒரு கட்டு கட்டிட்டுயிருந்தாங்க.. 

ஆனா அந்த பொண்ணு நூடுல்ஸ் 
சாப்பிட்டுட்டு இருந்தது.. அதுவும் 
இன்னும் பாதி கப் தான் இருந்தது.... 

ம்ம்.. போதுமா... அதுக்குள்ள 
ஒரு பச்சை புள்ளை மேல பாய்சன் 
தெளிக்க பார்க்கறீங்களே.... 



சரி..  நானும் போயி நின்னேனா.. 

ரெண்டு நிமிசம் ஆச்சு... 

4வது டேபிள்ல ஒரு சீட் காலி 
ஆச்சு.. அச்சச்சோ மிஸ்ஸூ.. 

அந்த பொண்ணு இன்னும் நூடுல்ஸ்சை 
கிளறிட்டு இருந்து..

4வது நிமிஷம்...

இப்ப முதல் டேபிள்ல ஒரு சீட் 
காலி அதுவும்.. மிஸ்ஸூ.. 

இப்பவும் அந்த பொண்ணு நூடுல்ஸ்சை 
நோண்டிட்டு இருந்து..

7வது நிமிசம்., 
8வது நிமிஷம், 
10வது நிமிஷம் 

வரிசையா எதோ ஒரு சீட் காலி 
ஆகிட்டு இருந்தது..  மத்தவங்க 
உக்காந்துட்டே இருந்தாங்க..

நான் அந்த பொண்ணை பார்த்தேன்..
எனக்கு செம கடுப்பாயிட்டது...

" எக்ஸ்கியூஸ் மீ மேடம்..!! "

" யெஸ்.. " 

" எனக்கு ஒரு டவுட்டு..!! " 

" சொல்லுங்க..!! "

" நீங்க நூடுல்ஸ்ல் சாப்பிடறீங்களா.? 
இல்ல எண்ணுறீங்களா..?!! " 

" கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்..! " 

21 November 2013

ஓ... மை காட்..!!!


இன்னிக்கு காலைல மங்குனி அமைச்சர்க்கு
போன் போட்டு....

" மங்கு.... உனக்கு ஒரு விஷயம்
தெரியுமா..?!! "

" என்ன..? "

" அடுத்த வருஷம் ( 2014 ) குடியரசு தினம்,
மஹாவீர் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி,
பக்ரீத்.. இந்த நாலு லீவும் சண்டேல
வருது..!! "

" ஓ... மை காட்...!! நிசமாவா சொல்ற..?!! "

" நீ வேணா செக் பண்ணிக்கோ...!! "

உடனே மங்கு காலண்டரை புரட்டி
பார்க்கும் சத்தம் கேக்கிறது..

ஒரு நிமிஷம் கழித்து லைனில்
வரும் மங்கு...

" ஹப்பாடி.. நல்லவேளை வெங்கட்..,
இந்த வருஷமும் Good Friday சண்டேல
வரல...!! "

" ஐயோ ராமா... என்னை ஏன் இந்த
மாதிரி பக்கிங்க கூட எல்லாம் கூட்டு
சேர வெக்கிற..?!!!! "

.
.

18 November 2013

தமிழ் வளர்த்த சான்றோர்கள்.. ( பாரதி )

டிஸ்கி : 6th Std படிக்கும் என் மகன் சூர்யா
ஸ்கூல் பேச்சுப்போட்டியில் பேசியது...



என் இனிய தமிழ் மக்களே...!!!

இதுவரை வகுப்பில் மட்டுமே
பேசிக்கொண்டிருந்த உங்கள் சூர்யா.,
இன்று மேடை ஏறி பேச வந்திருக்கிறேன்...

அனைவருக்கும் என் அன்பு வணக்கம்..!!

தமிழ் வளர்த்த சான்றோர்கள்…
ஒருத்தரா., ரெண்டு பேரா...?!!!

உ.வே.சாமிநாத அய்யர்., பரிதிமாற் கலைஞர்.,
மறைமலை அடிகள்., மு. வரதராசன்.,
ரா.பி.சேதுப்பிள்ளை., ச. வையாபுரிப் பிள்ளை
பாரதியார், பாரதிதாசன்..

இப்படி ஆயிரம் ஆயிரம் பேர் இருக்காங்க...

ஆனா நான் இன்னிக்கு பேச போறது
மகாகவி பாரதி பத்தி..

பாரதீ.. எங்கள் பாரதம் பெற்றெடுத்த தமிழ் தீ...!!

தமிழுக்கு அவர் செஞ்ச சேவைகளை
வரிசையா அடுக்கினா...
சீனப்பெருஞ்சுவரே சிறுசா போயிடும்..!!!

அவருக்கு முன்னால எழுதினவங்க
எல்லாம் தொல்காப்பிய இலக்கணம்
மாறாம மரபுக் கவிதையா எழுதினாங்க...

அதெல்லாம் நல்லா படிச்சவங்களுக்கு
மட்டுமே புரிஞ்சது....

ஆனா பாரதி..

எல்லா இலக்கணத்தையும் தூக்கி தூர
போட்டுட்டு புதுக்கவிதை எழுதினாரு..
அது சாதாரண மக்களுக்கும் போய்
சேர்ந்தது..

இப்ப புரியுதா...

அவர் வழி... தனி வழி..!!

ராஜாங்க காலத்துல தமிழ் ரொம்ப நல்லா
இருந்துச்சு... புலவர்களுக்கு பரிசு எல்லாம்
கொடுத்து தமிழை வளர்த்தாங்க....

ஆனா பாரதியோட காலத்துல அப்படியா..?!

சபையில சமஸ்கிருதம்.,
ஆட்சியில ஆங்கிலம்...

இதை பாத்துட்டு

வேற மொழிக்கு கட் அவுட்டு.,
தமிழுக்கு கெட் அவுட்டான்னு
பொங்கினாரு பாரதி...

அப்பல்லாம் கச்சேரில கூட சமஸ்கிருத
பாட்டுதான்...

ஒண்ணுமே புரியாது,,, ஆனாலும் தலையை
ஆட்டிட்டு இருப்பாங்க...

இப்ப எல்லா கச்சேரிலயும் தமிழ் பாட்டு
கேக்குதுன்னா.. அதுக்கு காரணம் நம்ம பாரதி..
நிறைய தமிழ்பாட்டு எழுதி இருக்காரு...

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்..

" மெல்லத் தமிழ் இனி சாகும்னு " பாரதியே
சொல்லி இருக்கார்னு சில பேர் சொல்லுவாங்க...

ஆனா.. பாரதி அப்படியா சொன்னாரு...??

" மெல்லத் தமிழ் இனி சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும் !
என்றந்தப் பேதை உரைத்தான் ! "-னு
சொல்றாரு...

" பேதைனா " பைத்தியக்காரன்னு அர்த்தம்...

இனிமே " மெல்லத் தமிழ் இனி சாகும்னு "
பாரதி சொல்லி இருக்கார்னு யாராச்சும்
உங்ககிட்ட சொன்னா...

" லூசாப்பா நீ..? " அப்படின்னு திருப்பி
கேளுங்க...!!

என்ன.. அங்கங்கே இங்கிலீஷ் வார்த்தை
வருதேனு பார்க்கறீங்களா... பாரதி ஒண்ணும்
இங்கிலீஷ்க்கு எதிரி இல்லயே....

அவருக்கு தமிழ், தெலுங்கு., இங்கிலீஷ்,
ப்ரெஞ்ச், இந்தி, சமஸ்கிருதம், வங்காளம்னு
பல மொழிகள் தெரியும்..

இருந்தாலும்

" யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்னு..... "

தமிழை தான் உயர்வா பாடி இருக்காரு...

அதுமட்டுமா.. வேற மொழி இலக்கியங்களையும்
தமிழ்ல மொழி பெயர்ப்பு செஞ்சாரு...

அவரை பொறுத்தவரை
மொழி தான் ஞானம்.
மொழிப்பற்று என்பது மானம்

ஆனா... இன்னிக்கு தமிழ்..?
" நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் "

இப்ப ஐபோன்ல தமிழ் வந்துடுச்சி.,,
ஃபேஸ்புக்ல தமிழ் வந்துடுச்சி.,,
இவ்ளோ ஏன்..
டிஸ்கவரி சேனல்ல கூட தமிழ்
வந்துடுச்சி..

ஆனா.. ஒரு சில தமிழர்கள் வாய்ல தான்
தமிழ் வரல..

தமிழ் தெரியாத இங்கிலிஷ்காரங்கிட்ட
தமிழ்ல பேசறது இல்ல... - ஆனா..
இங்கிலீஷ் தெரியாத தமிழன்கிட்ட
இங்கிலீஷ்ல பேசறது...

" கிட்ட தட்ட நான் ஒரு வெள்ளைக்காரனாவே
மாறிட்டேன்னு " சொல்றதுல நம்மாளுங்களுக்கு
ஒரு பெருமை..

என்ன கொடுமை சார் இது....?!

பாரதி என்ன மேற்கோளுக்காகவா
எழுதினார்..?
குறிக்கோளுக்காக எழுதினார்....

அவர் வாழ்க்கை..
நெஞ்சில் நிறுத்திக்கொள்ள மட்டுமல்ல.
நம்மை திருத்திக்கொள்ளவும் தான்..

அழகா இருக்குது தமிழ் எழுத்து,
அழிவா தமிழனின் தலை எழுத்து.,
தமிழா புறப்படு அதை எதிர்த்து
இனி கடலும் வணங்கிடும் வழி கொடுத்து

நன்றி..!!
.
.

08 November 2013

என்ன ஒரு வில்லத்தனம்..?!

நான் அப்ப நாலாவது தோசை
சாப்பிட்டுட்டு இருந்தேன்...

அப்ப கிச்சன்ல இருந்து என் Wife
குரல்....

" ஏங்க... தோசை போதுமா...? "

" போதும்...!! "

" நான் இப்ப நெய் ரோஸ்ட் ஊத்த
போறேன்... உங்களுக்கு வேணுமா..?!! "

ஆஹா.. நெய் ரோஸ்ட்...!!!

உடனே என் கிரிமினல் மைண்ட்.,
சே.., டிடெக்டீவ் மைண்ட் ஒரு
திட்டம் போட்டது...

( நமக்குன்னா சுமாராத்தான் சுடுவா..
அதே அவளுக்குன்னா சூப்பரா சுட்டுக்குவா..
அதனால இப்ப வேணாம்னு சொல்லிட்டு.,
வரும்போது களவாடிக்கலாம்..!!!
ஹா., ஹா., ஹா... )


(  இந்த மாதிரி ஒரு தோசை சாப்பிடணும்னா.... 
எதுவுமே தப்பில்ல....!! )

" எனக்கு வேணாம் நிர்மலா...!!! உனக்கு
வேணும்னா சுட்டுக்க...! "

" அப்புறம் கேக்க கூடாது... கேட்டாலும்
குடுக்க மாட்டேன்...! "

" இல்ல கேக்க மாட்டேன்...! "

( அதை எப்படி மேட்டர் போட்டு
வாங்கணும்னு தெரியாதா..? நாங்க என்ன
இன்னிக்கு நேத்தா கால்ல விழறோம்..?!! )

ரெண்டு நிமிஷத்துல.. கமகமக்கும்.,
மணமணக்கும் நெய் ரோஸ்டோட
வந்தாங்க என் Wife...

நான் என் Wife-கிட்ட...

" நிர்மலா.. அந்த ரோஸ்ட்டை எனக்கு
வெச்சிடு.. நீ இன்னொன்னு சுட்டுக்க..
ப்ளீஸ்.. ப்ளீஸ்...!! "

என் மனைவி ஒரு முறை முறைச்சாங்க...

" உங்களுக்கு இதே வேலையா போச்சு...
கேட்டா வேண்டாம்னு சொல்றது.. அப்புறம்
கேக்கறது.. "

" கணவன் ஆசைப்பட்டு கேக்கும்போது
இல்லன்னு சொல்லக்கூடாது ஔவையாரே
ஒரு பாட்ல சொல்லி இருக்காங்க தெரியுமா..? "

" எந்த பாட்ல இப்படி எல்லாம் சொல்லி
இருக்காங்க..? "

" எல்லாம் சங்ககால பாட்ல தான்..! "

" போதும்.. இந்த தோசைக்காக ஔவையாரை
எல்லாம் வம்புக்கு இழுக்காதீங்க... இந்தாங்க
வெச்சிக்கோங்க.... "

எனக்கு அந்த தோசை வைக்கப்பட்டது..

" ஹா., ஹா.. ஹா... ப்ளான் சக்ஸஸ்..!!! "

இதை கேட்டு என் Wife சிரிச்சிகிட்டே
சொன்னாங்க...

" எனக்கும் தான்... "

" உனக்குமா..? அப்படின்னா..? "

" எப்படியும் கேப்பீங்கனு தெரியும்..
அதான் உங்களுக்கு எப்பவும் சுடற
மாதிரியே சுட்டேன்... "

" அடிப்பாவி.. என்ன ஒரு வில்லத்தனம்..?!! "
.
.

30 October 2013

தீபா ' வலி ' பர்சேஸ் - 2

டிஸ்கி : இது போன போஸ்டோட 
தொடர்ச்சி...

நானும் என் Wife-ம் " சென்னை சிஸ்க்ஸ் "
உள்ளே போனோம்..

அரைமணி நேரத்துல ஒருவழியா
ஒரு சேலை செலக்ட் பண்ணிட்டாங்க..

900 ரூபா..

" ஒண்ணு போதுமா..? "

" இல்ல இன்னொண்ணு எடுக்கணும்ங்க..!! "

" சரி எடுத்துக்க,,,, "

" அப்ப வாங்க வேற கடைக்கு போலாம்..! "

" ஒரு சேலைக்காக வேற கடை போகணுமா..?
இங்கேயே எடுத்துக்க..!! "

இதை கேட்டதும் என் Wife ஷாக் ஆகிட்டாங்க...

" ஆமா.. இப்ப எதுக்கு நீ இப்படி ஷாக்
ஆகுற..? "

" பின்ன...?! என்னாங்க இது கெட்ட பழக்கம்..?
ஒரே கடையில ரெண்டு சேலை எடுக்கறது..?!! "

" அடிப்பாவி... இதெல்லாம் இப்ப கெட்ட
பழக்கமா...?!! "

" இல்லியா பின்ன..? அப்ப எப்படி மத்த
கடையை எல்லாம் சுத்தி பார்க்குறதாம்..? "

" அதெல்லாம் முடியாது இங்கேயே எடு...!! "

" அப்படின்னா எனக்கு அந்த சேலையை
வாங்கி குடுங்க.. "

ஒரு சேலையை கையை காட்டினாங்க...

நானும் அதை உத்து பார்த்தேன்...

அடங்கொன்னியா... என்னடா இது
இத்தனை சைபர் போட்டு இருக்குது..
எனக்கு வேற ரெண்டு லட்சத்துக்கு மேல
எண்ண தெரியாதே..






அப்படியே சிரிச்சிகிட்டே
( வழிஞ்சிகிட்டேன்னு வெச்சிக்கலாம்.. )

" ஹி., ஹி., என்ன நிர்மலா இதை போய்
கேக்கற..? கொஞ்சம் காஸ்ட்லியா பாரும்மா...!! "

" ம்ம்க்கும்... இந்த டயலாக்குக்கு ஒண்ணும்
கொறைச்சல் இல்ல.... "

" ஹி., ஹி., ஹி...!! "

( நான் என் பர்ஸ்சை தொட்டு பாத்துகிட்டேன்..
அதுல இருந்த 2,147 ரூபா அப்படியே தான்
இருந்தது.. )

.
.

29 October 2013

தீபா ' வலி ' பர்சேஸ் - 1


தீபாவளி பர்சேஸ் போலாம்னு
ஒரு வாரமா என் Wife கேட்டுட்டே
இருந்தாங்க...

ஆனா.. நானு...

" வர்ற திங்கக்கிழமை போலாம்..!! "

" ஏங்க தீபாவளி வாரம்... கூட்டமா
இருக்கும்.. "

" ஆங்.. இங்கே தான் சாதாரண
மக்களின் சிந்தனையும்., ஒரு
தொழிலதிபர் சிந்தனையும் மாறுபடுது..!! "

" தொழில் அதிபரா..? யாரு..? "

" ஹி., ஹி., ஹி... நான் தான்...! "

" அடடா.. இந்த தொழில் அதிபர்கள்
தொல்லை தாங்கலப்பா.. வர வர
பஞ்சு மிட்டாய் விக்கிறவங்க எல்லாம்... "

" ஸ்டாப்., ஸ்டாப்...!! "

" சரி உங்க தொழில் அதிபர் சிந்தனை
என்ன சொல்லுது..?! "

" அதாவது... சன்டேவுக்கு அப்புறம்
மன்டே....!!! "

" வாவ்.. வாவ்... வாவ் இதை நீங்களே
கண்டுபிடிச்சீங்களா..? எப்படி முடியுது
உங்களால..? "

" உஷ்... குறுக்க குறுக்க பேசாகூடாது..
சொல்றதை கேளு..!! "

" சரி சொல்லுங்க...! "

" சன்டேலயே எல்லோரும் பர்சேஸ்
வந்துட்டு போயிடுவாங்க.. அப்புறம்
மன்டேல கடை காத்து வாங்கும்.. "

என் இந்த ஐடியாவ கேட்டு

" உங்களுக்கு மட்டும் எப்படிங்க இந்த 
மாதிரி ஐடியா எல்லாம் தோணுது? "னு
என் Wife அவங்க மனசுல நினைச்சது
எனக்கு வெளில கேட்டுச்சு....

ம்ம்ம்.. என்ன பண்றது..? நானெல்லாம்
பொறந்ததுல இருந்தே அப்படி...!!

அப்புறம் ஒரு வழியா... நேத்து தான்
" சென்னை சில்க்ஸ் " போனோம்...

அங்கே என்னடான்னா...

செம, செம, செம கூட்டம்...

அதை பாத்துட்டு என் Wife என்னை
கேவலமா ஒரு லுக் விட்டுட்டு...

" என்னமோ பெருசா கூட்டமே
இருக்காதுன்னு சொன்னீங்க...?

" இப்பத்தான் எனக்கு ஒரு விஷயம்
புரிஞ்சது..!!! “

" என்ன..? " 

“ ஹி., ஹி., ஹி...., சேலத்துல நிறைய 
தொழில் அதிபர்கள் இருக்காங்கன்னு..."

" நான் கூட ' நீங்க ஒரு லூசு '-னு 
புரிஞ்சிடுச்சோன்னு நெனைச்சேன்...!! “

" கிர்ர்ர்ர்ர்ர்.......!!
.
.

18 October 2013

அஞ்சாறு பேருக்கு நல்லதுன்னா...


நேத்து மதியம்
என் ஆயிரக்கணக்கான ரசிகைகள்ல (?! )
ஒருத்தங்க கேட்டாங்க....

" வெங்கட்.. நீங்க இதுவரை சூசைட்
பண்ணிக்க போற யாரையாச்சும்
தடுத்து இருக்கீங்களா..? "

" தடுத்து இருக்கீங்களாவா...?! அஞ்சாறு
பேரை காப்பாத்தி இருக்கேங்க..! "

" வாவ்.. அஞ்சாறு பேரா..?! "

" ஆமா.. நானெல்லாம் இதை ஒரு
பொதுசேவையாவே பண்ணிட்டு
வர்றேன்னா.. பாருங்களேன்...!! "

" நிசமாத்தான் சொல்றீங்களா..?! எப்பவும்
போல இதுவும் பொய் சொல்லலையே..! "

" பொய்யா... அது எப்படி இருக்கும்..
கருப்பா..? சிகப்பா..?!! "

" ஹா.., ஹா.., நீங்க தான் Mr.அரிச்சந்திரன்
ஆச்சே...!! "

" ம்ம்.. நம்புனா சரி..!! "

" ஆமா என்ன சொல்லி அவங்களை
கேன்வாஸ் பண்ணுவீங்க.. கஷ்டமா
இருக்குமே..! "

" கஷ்டமா.. அதெல்லாம் ஒண்ணுமில்ல
சும்மா நாலு வார்த்தை சொல்லுவேன்..
உடனே மனசு மாறிடுவாங்க..! "

" அப்படி என்னங்க சொல்லுவீங்க..?! "

" சரி., சரி.. இனிமே போஸ்டிங் போடலை
போதுமா..? " இதான் சொல்லுவேன்..

" ஹா., ஹா., ஹா..!!! "
.
.

09 October 2013

யார் அந்த போதி தர்மன்..?!!


டிஸ்கி : இது எதோ ஆராய்ச்சி கட்டுரை
போலன்னு நினைச்சி இங்கே வந்திருந்தீங்கன்னா...
சாரி... உங்களுக்காக நான் அனுதாபம் தான்
படமுடியும்..

பின்ன..

" சரவண பவன்ல சிக்கன் 65-ஆ கிடைக்கும்.?! "

ஒ.கே மேட்டர்க்கு போலாம்....

7-ஆம் அறிவு படம் ரிலீஸ் ஆகியிருந்த
சமயம்.. நான் தியேட்டர்ல உக்காந்து
படம் பாத்துட்டு இருக்கேன்..

போதிதர்மன்., DNA., பரம்பரை ஜீன்-னு
படம் ஓடிட்டு இருந்தது...

எனக்கோ தப்பிதவறி Zoology லேப்க்கு
எதுனா வந்துட்டோமோனு  ஒரு மாதிரி
பயமா இருந்துச்சு...

அப்பத்தான் அது நடந்தது.....

ஹி., ஹி., ஹி... ஒன்னுமில்ல...
Interval விட்டானுவ..

10 நிமிஷம் நிம்மதியா இருக்கலாம்..

சரி போர் அடிக்குதேனு என் மொபைலை
எடுத்து பாத்தேன்... ஒரு மிஸ்டு கால்
இருந்தது..

என் ப்ரண்டு மணிதான் கூப்பிட்டு இருந்தான்..
சரி அவனையாவது10 நிமிஷம் லந்து
பண்ணலாம்னு கூப்பிட்டேன்..

" ஹலோ.. மணி..! "

" சொல்லுடா.. "

" உனக்கு ஒரு ரகசியம் சொல்லவா.? "

" சொல்லு.. "

" போதிதர்மன் DNA-வோட என் DNA
99% ஒத்து போகுது.. "

" நிசமாவாடா...?!!!!! "

" ஆமாண்டா... ஆனா இந்த மேட்டரை
வெளில லீக் பண்ணிடாதே..!! "

" சொல்லமாட்டேனே... அப்புறம்
A.R முருகதாஸ் மாட்டிப்பாரு....! "

" ஏதுக்கு..?! "

" பின்ன.., போதிதர்மன் பெரிய அறிவாளின்னு
பொய் சொல்லி இருக்கார்ல.. அதுக்கு தான்..!! "

" அட நாயே...!!! "

29 September 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம்


நேத்து " வருத்தப்படாத வாலிபர் சங்கம் "
படம் போயிருந்தேன்...

டைம் போனதே தெரியல...
அவ்ளோ சூப்பர்..

ஆரம்பத்துல ஒரு 5 நிமிஷம் தான்...
அப்புறம் நான் ஸ்கிரீன்ல வெச்ச
கண்ணை எடுக்கவே இல்ல...

இண்டர்வெல் விட்டப்ப கூட
" உங்களை யார்ரா இப்ப இண்டர்வெல்
விட சொன்னதுனு " எந்திரிச்சி சவுண்ட்
விடலாமான்னு நினைச்சேன்...

அப்புறம் தியேட்டர்ல வேற கூட்டம்
நிறைய இருந்துச்சா.... வாசல் கேட் வேற
பூட்டி இருந்துச்சா.. அதனால வந்த
கோவத்தை கன்ட்ரோல் பண்ணிகிட்டேன்..
ஹி., ஹி., ஹி.....

இண்டர்வெல்க்கு அப்புறம் இன்னும் சூப்பர்...

ரெண்டு பாட்டு.. ஆஹா அழகோ.. அழகு...!!

சும்மா சொல்லக்கூடாது பாத்துட்டே
இருக்கலாம் போல இருந்துச்சு..

செம மாஸு.., செம க்ளாஸு..!!

அப்புறம்..
படம் கூட நல்லா இருந்துச்சின்னு
என் Wife சொன்னாங்க...

( "என்னது அப்ப இவ்ளோ நேரம் நான்
எதை பத்தி பேசிட்டு இருந்தேனா..?!! ")

ஹி., ஹி., ஹி...

அது...

ரெண்டரை மணி நேரம் நான் யாரை
மட்டுமே பாத்துட்டு இருந்தேனோ..
அவிங்கள பத்தி தான்...

இப்புடு சூடு..........

லதாபாண்டி ( ஸ்ரீதிவ்யா )

.
.

20 September 2013

மின்சார கனவு..!!


நேத்து நைட் எனக்கு ஒரு
கொடுமையான கனவு..

அந்த கனவு இதான்..

அது 10th Result வர்ற நாள்..
மணி அப்ப சரியா 9.10 AM

நான்.,மத்த Students கூட Result-க்காக
ஸ்கூல் வராண்டால Wait பண்ணிட்டு
இருக்கேன்..!

அப்ப எங்க ஸ்கூல் Correspondent
வேக வேகமா எங்களை பாத்து
வர்றாரு.. வந்து...

" இங்கே யாருப்பா வெங்கட்..? "

( எனக்கு பக்னு இருக்கு.. இவரு எதுக்கு
நம்மள கேக்கறாரு..? ஒருவேள நாம
மட்டும் தான் அவுட்டா..?!! )

" சார்ர்ர்... நான் தான் வெங்கட்..! "

" ஓ.. நீதானா அது..? Congrats..! "

" எதுக்கு சார்..?! "

" நீதான்பா State 1st.."

எனக்கு தூக்கி வாரி போட்டது..

" சார்.. என்ன சார் சொல்றீங்க..?
எதுக்கும் நல்லா பாருங்க சார்..! "

( நேத்து வரைக்கும் இவர் நல்லாதானே
இருந்தாரு..!?!! )

" 437854 - இது உன் நம்பர் தானே..?! "

" ஆமா சார்..! "

" அப்ப நீதான் State 1st.. உன் மார்க் 496..! "

( அடங்கொன்னியா... நாம மொத்தமாவே
அவ்ளோ மார்க்குக்கு எழுதி இருக்க
மாட்டோமே..! )

" நல்லா கூட்டி பார்க்க சொல்லுங்க
சார்..! "

" அதெல்லாம் நல்லா கூட்டி பார்த்து
தான்பா போட்டு இருப்பாங்க..! "

" சார்.. நீங்க என்னை வெச்சி காமெடி.,
கீமெடி பண்ணலையே..! "

" அட.. என் குலதெய்வம் மேல சத்தியமா
நீதான் State 1st..! "

" பாத்து சார்.. உங்க குலதெய்வத்துக்கு
எதாவது ஆயிடபோகுது..!! "

" அட.. நம்புப்பா..! "

எனக்கு செம குஷி ஆயிடுச்சு..

இதுவரைக்கும் கனவு நல்லா தான்
போயிட்டு இருந்தது..

அதுக்கு அப்புறம் அவர்கிட்ட நான்
ஒண்ணு சொன்னேன் பாருங்க...

" ஓ.கே சார்.. அப்படியே என் Wife-க்கு
போன் பண்ணி இந்த விஷயத்தை
நீங்களே சொல்லிடுங்க.. நான் சொன்னா
அவ நம்பமாட்டா..! "

ஹும்ம்ம்.... State 1st எடுத்ததுக்காக நான்
சந்தோஷப்படறதா..? இல்ல கல்யாணமாகி
இத்தனை வருஷம் கழிச்சு தான் 10th Pass
பண்ணியிருக்கேன்னு பீல் பண்றதா..?!

அவ்வ்வ்வ்..!
.
.

17 September 2013

என்ன தப்பு பண்ணினான் என் கட்சிக்காரன்..?!!




என் ப்ரெண்ட் கடையில நின்னு பேசிட்டு
இருக்கும் போது.. பக்கத்துல இருந்த
ஒருத்தரு அவர் பையனை சரமரியா
திட்டிட்டு இருந்தாரு...

ஒட்டு கேட்டதுல அவனுக்கு மார்க்
கம்மியா  போச்சாம்..

அதான் பிரச்னை...

அப்படி எவ்ளோ கம்மி மார்க்யா
எடுத்துட்டான் என் கட்சிக்காரன்னு
களத்துல குதிச்சேன்....

அவங்க அப்பாவை பாத்து...

" எத்தனை மார்க்ணே எடுத்து இருக்கான்..! "

" 465 மார்க்...! "

" ஏண்ணே இது போயி கம்மியா..?
நானெல்லாம் 442 மார்க் தான் எடுத்தேன்..
இப்ப என்ன கெட்டு போச்சி..! "

" அட நீ வேற தம்பி... நான் சொன்னது
+2 மார்க்கு...! "

" ஹி., ஹி., ஹி..... நான் சொன்னதும்
+2 மார்க் தான்ணே..! "

" ??!??!?!?!?!?! "
.
.

10 September 2013

டீ கடை பெஞ்ச்..!!



" ராமன் ஆண்டாலும்.,
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்ல..!!! "

ஹி., ஹி., ஹி.. ஒண்ணுமில்ல
டீ குடிக்கலாம்னு கடைக்கு போனப்ப
அங்கே டிவில இந்த பாட்டு ஓடிட்டு
இருந்தது..

டீயை வாங்கிட்டு பாத்தா..
பக்கத்து பெஞ்ச்ல தெரிஞ்சவரு ஒருத்தரு...

அவரு எப்ப பாத்தாலும் கட்சி., கட்சின்னே
சுத்திட்டு இருப்பாரு.. கட்சி பொறுப்புல
எல்லாம் இருந்தாரு..

அப்படியே நைசா அவர்கிட்ட பேச்சு
குடுத்தேன்...

" வணக்கம்ணே..!! "

" வணக்கம் தம்பி..! நல்லா இருக்கியா..? "

"  நல்லா இருக்கேன்ணே.. ஆமா இப்பவும்
கட்சில பொறுப்பு எதாவது குடுத்து
இருக்காங்களா..? "

" இல்லப்பா..! " ரொம்ப பீலிங்கா சொன்னாரு...

" அப்ப பொறுப்பில்லாம சுத்திட்டு
இருக்கீங்கன்னு சொல்லுங்க "னு
சொன்னேன்..

இதுக்கு போயி மொறைக்கிறரு...!!
.
.

06 September 2013

சாட்ல ஒரு பொண்ணு...!!!



சாட்ல ஒரு பொண்ணு... 

" ஏங்க உங்க தாத்தாவோட தாத்தா பேரு
தெரியுமா..? " 

" ஓ.. தெரியுமே.. பாலகிருஷ்ணன்..! "

" அவரோட அப்பா பேரு..? "

" வெங்கடாஜலபதி "

" சரி., அவரோட அப்பா பேரு..? "

" அது வந்து... வந்து.. ஆங்.. கந்தசாமி "

அந்த பொண்ணுக்கு ஆச்சரியம் தாங்கல..

" எப்படிங்க.. உங்களுக்கு இதெல்லாம்
தெரியுது..? "

" வெரி சிம்பிள்.. உங்களுக்கு தான்
அவங்க பேரு தெரியாதே..!! "

" ஙே...! "

நன்றி - காயத்ரி ,
Fan of மங்குனி அமைச்சர் ( ரொம்ப முக்கியம்.! )

.
.

04 September 2013

சென்னை பதிவர் திருவிழா " N " அலப்பறைகள் - (பைனல்ஸ்)

டிபன் சாப்பிடறதுக்காக நடந்து ஒவ்வொரு
ஹோட்டலா பாத்துட்டே வந்தோம்..
திடீர்னு ஒரு ஹோட்டலை பாத்ததும்
ஷாக் ஆகிட்டேன்..

அது...


" அச்சச்சோ... பேசிட்டே அடையார் வரை 
வந்துட்டோம் போல இருக்கே தேவா..! " 

" சார்.. அது ஹோட்டல் பேரு..! " 

" அப்படியா...? வடபழனில வந்து 
' அடையார் '-னு பேரு வெச்சி இருக்காங்க..
சுத்த லூசுப்பசங்களா இருப்பாங்களோ..?!! " 

இதை கேட்டு தேவா ஒருமாதிரி சிரிச்சாரு...
ஏன் அப்படி சிரிச்சாருன்னு தான் தெரியல..

அப்புறம் மீட்டிங் ஹாலுக்கு போனோம்..


அங்கே KRP செந்தில்., பிரபு கிருஷ்ணா, 
ப்ளாக்கர் நண்பன், ரஹீம் கஸாலி, 
கோவை நேரம் எல்லோரும் என்னை 
அடையாளம் கண்டுகிட்டு அன்பா பேசினாங்க..

ஆனா..... 

வந்தவங்களுக்கு Fanta குடுத்த 
" காணாமல் போன கனவுகள் " ராஜி 
மட்டும் எனக்கு பக்கத்தில் இருந்தவர் 
வரை குடுத்துட்டு அப்புறம் காணாம 
போயிட்டாங்க..

எனக்கு செம டென்ஷனா போச்சு.. 

அவங்களை தேடி பிடிச்சி.. 

" ஏங்க எனக்கு மட்டும் Fanta குடுக்கலை..! " 

" உங்களுக்கு ஏன் குடுக்கணும்..? நீங்க மட்டும் 
என் ப்ளாக்ல வந்து லைக்., கமெண்ட்டா 
போடறீங்க..? "

எனக்கு வந்துச்சே கோவம்..

அது ஒரு மொக்கை ப்ளாக் ( என் ப்ளாக்கே
பரவாயில்ல.. ) அதுல கமெண்ட் போட்டா தான் 
Fanta கிடைக்கும்னா.. நான் Coca Cola கம்பெனியவே 
இந்தியாவ விட்டு தள்ளி வெக்கிறேன்டா..

இதான்டா என்ர தீர்ப்பு..!!

மதியம் வரை நான் பயங்கர கோவத்துல 
தான் இருந்தேன்.. 

ஆனா லஞ்ச் டைம்ல பிரியாணி பரிமாறும் போது.. 
எல்லோருக்கும் ரெண்டு சிக்கன் பீஸ் வெச்ச 
கேபிள் சங்கர்... எனக்கு மட்டும் மூனு பீஸ் 
வெச்சாரா...

என் கோவம் பறந்து போச்சு...

ம்ம்.. நெக்ஸ்ட்...

பெரியவங்ககிட்ட மரியாதையா இருக்கோணும்னு 
என் சிஷ்யபுள்ள சிவசங்கருக்கு அட்வைஸ்
பண்ணியிருந்தேன்...

( குரு பேச்சை தட்டாத என் சிஷ்யன் 
சிறப்பு விருந்தினர் திரு.பாமரனுடன் )

டிஸ்கி 1 : அடையாளம் தெரியக்கூடாதுன்னு 
பன்னிக்குட்டி ராம்சாமி வேற பதிவர் பெயர்ல 
வந்திருந்தாரு.. அவரை யாருக்கும் அடையாளம் 
தெரியல.. 

டிஸ்கி 2 : மங்குனி அமைச்சரும் கூலிங்கிளாஸ் 
போட்டுட்டு , கன்னத்துல மச்சம் வெச்சிட்டு
மாறுவேஷத்துல வந்திருந்தாரு.. ஆனா 
அவரை எல்லோரும் மண்டப வாட்ச்மேன்னு 
நினைச்சிட்டாங்க..
.
.

03 September 2013

சென்னை பதிவர் திருவிழா " N " அலப்பறைகள் - 2




நேரா போயி AVM ஸ்டுடியோ வாசல்ல
இறங்கினோம்...

அங்கே பக்கத்துல இருந்த மரத்துல 
தொங்கிட்டு இருந்தது இந்த நோட்டீஸ்...

( நல்லவேளை இதையெல்லாம் பார்க்க 
வாலி இல்ல... )

Mr.A.R.முருகதாஸ்., Mr.கௌதம் மேனன் 
இந்த வாய்ப்பை நழுவ விட்டுடாதீங்க..
ரொம்பவே பீல் பண்ணுவீங்க.., அம்புட்டுதான் 
சொல்லுவேன்..

அப்புறம்.. 

" அப்படியே எதிர்ல இருக்குற சந்துல 
வாங்க.. அங்கே MAKAFI-னு ஒரு லாட்ஜ்ல 
ரூம் போட்டிருக்கு "-னு சொன்னாங்க.. 

நான் அங்கே இருந்த பீடா கடையில 

" அண்ணே... இது முட்டு சந்தா..? " 

" இல்லதம்பி... ஏன் கேக்கறீங்க..? " 

" ஒண்ணுமில்லண்ணே.., சும்மா 
கேட்டேன்..! "

( நான் எப்பவுமே இப்படித்தான் உஷாரா
இருப்பேன்.. )

அப்படியே லாட்ஜை கண்டுபிடிச்சி 
போனோம்..

அங்கே ப்ளாக்கர்ஸ் ஸ்கூல்பையன்,
கோகுல், குடந்தை சரவணன் , ஜோதிஜி
எல்லோரும் இருந்தாங்க.. 

அன்பா வரவேற்று பேசி.. 

" இந்த ரூம் எடுத்துக்கோங்கனு " ஒரு ரூம் 
காட்டினாங்க..

அங்கே ஏற்கனவே திண்டுக்கல் தனபாலன் 
இருந்தாரு... 

நான் அவர்கிட்ட போயி..

" ஹாய்.. ஐயம் கோகுலத்தில் சூரியன் 
வெங்கட் " -னு கை குடுத்தேன்...

ஒரு பிரபல ப்ளாக்கர் நம்ம ரூம்க்கு 
வந்து இருக்காரேன்னு நினைச்சாரோ 
என்னவோ என்னை பார்த்ததும்.. 

அவருக்கு கை, கால் எல்லாம் நடுங்கி 
வேர்த்து ஊத்த ஆரம்பிச்சிடுச்சு..

கர்சீப் எடுத்து துடைக்கிறாரு, துண்டு எடுத்து 
துடைக்கிறாரு.... வேர்வை ஆறா ஓடுது..

சரி நாமளே அவரை கூல் பண்ணலாம்னு.. 

" சார் நானும் ஒரு சாதாரண ப்ளாக்கர் 
தான் ( தன்னடக்கம்... ப்ளீஸ் நோட் திஸ் ) 
என்னை பாத்து ஏன் இப்படி டென்ஷனாகறீங்க..? " 

ஒரு தடவை என்னை மேலயும் கீழயும் 
பார்த்தாரு...

" ஏய் வெண்ணை.. கரண்ட் போயி Fan ஓடல...!! " 

( ஹி., ஹி., ஹி.. கொஞ்சம் ஓவராத்தான் 
போயிட்டோமோ..?!! ) 

( தொடரும்... )
.
.

02 September 2013

சென்னை பதிவர் திருவிழா " N " அலப்பறைகள் - 1

பதிவர் திருவிழால கலந்துக்க நானும்., 
சேலம் தேவாவும் சென்னை கிளம்பினோம்.. 

டிரைன் சென்னைக்கு காலைல 5 மணிக்கு 
ரீச் ஆகும்.. அங்கே போயி எப்படி போறதுன்னு 
எந்த டீடெய்லும் தெரியாது.. 

உடனே தேவா..

" இருங்க சார்.. சங்கவிக்கு போன் பண்ணி 
தர்றேன்னு " போன் போட்டு குடுத்தாரு..!! 

" ஹலோ நான் வெங்கட் பேசறேன்..! "

" சொல்லுங்க.. நான் சங்கவி பேசறேன்..! " 

" என்ன சங்கவி திடீர்னு ஆம்பள வாய்ஸ்ல 
பேசறீங்க..?? " 

" யோவ்.. நான் ப்ளாக்கர் சதீஷ் சங்கவியா..? " 

" ஹி., ஹி., ஹி.. நான் நடிகை சங்கவியோன்னு 
நெனச்சேன்... " 

" நெனப்பீரு..! "

( வாட்..?!! என் நம்பர் உங்ககிட்ட இல்லையா 
வெங்கட்..??!!! ) 

" சரி.. எங்களை பிக்-அப் பண்ண கார் எதுனா 
அரேஞ்ச் பண்ணியிருக்கீங்களா..? " 

" கார் என்ன பஸ்சே அரேஞ்ச் பண்ணியிருக்கோம்..! "

" என்னாது பஸ்ஸா..? " 

" ஆமா.. ஸ்டேஷனுக்கு வெளியே 17E-னு 
ஒரு பஸ் நிக்கும் ஏறி வந்துடுங்க.. டிப்ஸ் கேட்டா 
12 ரூபா மட்டும் குடுங்க போதும்..!! "

( ம்ம்ம்ம்.. நல்லா சொல்றாங்கய்யா டீடெயிலு...!! )

" சரி எங்கே வரணும்..? "

" AVM ஸ்டுடியோ ஸ்டாப்பிங்..!! " 

ஓ.. AVM ஸ்டுடியோ முன்னாடிதான் 
பளாக்கர்ஸ்க்கு ரூம் போட்டிருக்கீங்களா.??

அப்ப காலைல முதல் வேலையா 
தமன்னா., அனுஷ்கா, சமந்தா 
யாராச்சும் வர்றாங்களான்னு 
பார்க்கணும்..

வந்தா... உடனே ஓடி போய் ஒரு போட்டோ 
எடுத்துகிட்டு, நம்ம ஆட்டோகிராப் ஒன்னு 
போட்டு குடுத்துட்டு வந்திடணும்.... 

ஆங்ங்...!!
( ஹி., ஹி., ஹி... அடங்க மாட்டோமில்ல.. )

( தொடரும்..)

டிஸ்கி :  மீட்டிங்குக்கு சங்கவி வராங்கன்னு 
என்னை ஏமாற்றி சென்னை வரவழைத்த 
ப்ளாக்கர் சங்கவி இவர்தான்... 


ஏமாத்திட்டீர்ல.. போட்டோ சின்னதாதான் போடுவேன்..
.
.

23 August 2013

கேப்டன் Vs கேப்டன்


கேப்டன் டோனி, கேப்டன் விஜயகாந்தை
சந்திக்க வருகிறார்..

அப்போது டோனி அவரை பாத்து...

" நமஸ்தே ஜி...!! "

" எதோ எனக்கு தெரிஞ்ச இங்கிலீஸ்ல
கேக்கறேன்.. துமாரா நாம் க்யா ஹை..? "

இதை கேட்டதும் டோனி ஜெர்க் ஆகிறார்..

" Mr.விஜய்காந்த்.. எனக்கு தமிழ் தெரியும்.,
நாம தமிழ்லயே பேசலாம்.. நான் டோனி.. "

" ஓ.. நீங்கதான் டோனியா.. ஆமா நீங்க
எதோ இந்தியாவுக்கு ஓல்டு கப் வாங்கி
குடுத்தீங்கன்னு பசங்க சொன்னாங்க.. 

நம்மகிட்ட சொல்லியிருந்தா ஒரு நியூ கப்பே 
செஞ்சி குடுத்திருக்கலாம்.! "

" நீங்க மட்டும் வெள்ளக்காரன் காலத்துல
இருந்திருக்கணும் சார்.... வெள்ளக்காரன்
இங்கிலாந்தையும் நமக்கே எழுதி கொடுத்துட்டு
ஆப்பிரிக்காவுக்கு ஓடியிருப்பான்.. "

" தம்பி நீங்க என்னை ரொம்ப புகழ்றீங்க.. "

" உங்க ரேஞ்ச்க்கு இதெல்லாம் கம்மி கேப்டன்..! "

" ஹி., ஹி., ஹி... அப்படீங்கறீங்க.. சரி
என்னை பத்தி உங்களுக்கு யார் சொன்னா..? "

" இன்சமாம்-உல்-ஹக் சொன்னாரு..? "

" யாரு அது பாகிஸ்தான் தீவிரவாதியா..? "

" சே., சே., முன்னாள் பாகிஸ்தான் கேப்டன்.. "

" கேப்டனா.. அவரும் பாகிஸ்தான்ல நடிகரா..?
இல்ல கட்சி வெச்சி இருக்காரா..? "

" இல்ல.. அவரு கிரிக்கெட் கேப்டன்..! "

" ஆமா அவருக்கு எப்படி தெரியும்...? "

" நீங்க அடிக்கடி பாகிஸ்தான்ல ரோட்டோரமா
தீவிரவாதிகளை திருத்த கேம்ப் போடுவீங்களாம்ல..
அப்ப பார்த்து இருக்காராம்.. "

" ஓ.. நான் வேற கொஞ்ச நாளா அங்கே
போகல... இப்ப எப்படி இருக்காம் பாகிஸ்தான்..? "

" அங்கங்கே ' கேப்டன் தீவிரவாதிகள் சீர்திருத்த
பள்ளி ' ஆரம்பிச்சி இருக்காங்களாம்... அதனால
முன்ன மாதிரி பிரச்னை இல்லையாம்.., "

" அப்படியா..? "

" ஆமா.. எவனாவது சின்னதா வாலாட்டினா கூட
நீங்க மூச்சு விடாம மூணு மணி நேரம் பேசின
டிவிடி-ஐ போட்டு காட்றாங்களாம்.. அவனுங்க
அப்படியே மயக்கம் போட்டு , கோமா ஸ்டேஜ்க்கு
போயிடறாங்களாம்..! "

" ம்ம்.. ஆனா இன்னும் பார்டர்ல தகராறு
பண்ணிட்டு தான் இருக்கானுங்க போல.. "

" யெஸ் Mr.விஜய்காந்த்.. அவனுங்களுக்கும்
நாம சாவு பயத்தை காட்டணும்.. அதுக்கு தான்
உங்களை மீட் பண்ண வந்தேன்...! "

" என்ன பண்ணலாம்..? நான் வேணா என்
துப்பாக்கியை ரெடி பண்ணிக்கட்டுமா..? "

" அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..
பாகிஸ்தான் பார்டர்ல ஒரு மீட்டிங் அரெஞ்ச்
பண்ணியிருக்கு.. நீங்க வந்து பேசுங்க போதும்..! "

" ??!?!??! "




---------------------------------------------------------------------------

டிஸ்கி : திரு. வெங்கடேஷ் ஆறுமுகம் அவர்கள் 
Facebook-ல் நடத்திய " எழுத்தாளர் சுஜாதா நினைவு 
கற்பனைத்திறன் போட்டி - 3 "-ல் எனக்கு முதல் பரிசு 
வாங்கி தந்த என் படைப்பு தான் இது..

இந்த வார தலைப்பு : இவர்கள் சந்தித்தால்...!

.
.

22 August 2013

இம்சை அரசனும், Facebook-ம்..!!!


" மன்னா.. ஆபத்து.., ஆபத்து.... "

" என்னய்யா ஆபத்து... என் அக்கவுண்ட்டை 
யாராவது ஹேக் செய்து விட்டார்களா..? "

" இல்லை மன்னா.. பக்கத்து நாட்டு மன்னன் 
நம்மீது போர் தொடுக்க போகிறானாம்..
ஸ்டேடஸ் போட்டு இருக்கிறான்... "

" என்னாது போரா..? நாம் தான் அவன் 

போடும் எல்லா மொக்கை ஸ்டேடசுக்கும் 
லைக் போடுகிறோமே... பிறகு எதற்கய்யா 
போருக்கு வருகிறான்.. "

" அவர் அந்தபுரத்தில் இருக்கும் இரண்டு

 ராணிகளுக்கு நீங்கள் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் 
அனுப்பினீர்களாமே... "

" ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினதுக்கு 

எல்லாமா போர்.. பெரிய அக்கப்போராய் 
அல்லவா இருக்கிறது..
அவ்வ்வ்..!! "
.
.

20 August 2013

ராக்கி கட்டுங்க ப்ளீஸ்..!!


நாள் : Raksha Bandhan

நான் காலேஜ் படிக்கும்போது
என் ப்ரெண்ட்ஸ் எல்லோர் கையிலயும்
ஏழெட்டு ராக்கி இருக்கும்..

ஆனா நம்ம கையில ஒண்ணு கூட
இருக்காது.... ஆச்சரியமா கேப்பானுங்க...

" மச்சி.. எப்படிடா உன்னால மட்டும்
முடியுது.? "

" அது வெரி சிம்பிள் டெக்னிக்.. "

" அதை கொஞ்சம் எங்களுக்கும் சொல்லி
குடேன்.."

" அட இப்ப ராக்கி கட்டணும்னு பொண்ணுங்க
வந்தாங்கன்னு வையி..

அவங்களை பாத்து...

ராக்கி கட்றேன்., அண்ணா., நொண்ணான்னு 
யாராச்சும் இன்னிக்கு வந்தீங்க பிச்சிபுடுவேன் 
பிச்சி... 

உங்க எல்லாரையும் விட நான் ரொம்ப 
சின்னபையன்... அதனால.. 

நல்லாருக்கியா தம்பி.?னு கேட்டுட்டு.. 
ஆளுக்கு 100 ரூபா செலவுக்கு குடுத்துட்டு 
போங்கனு சொல்லுவேன்..

உடனே ஓடி போயிடுவாங்க.. "

ஹி., ஹி., ஹி...!!
.
.