மண்டபம் களை கட்டி இருந்தது..
அப்ப என் சகலை என்கிட்ட..
" சகலை.. அந்த பொண்ணு யாரு..? "
" எந்த பொண்ணு..? "
" அதோ.. பச்சை கலர் சுடிதார் போட்டிருக்குல்ல
அந்த பொண்ணு..! "
" எதுக்கு கேக்கறீங்க..? "
" ஜெனரல் நாலேட்ஜ் வளர்த்துக்க தான்..! "
நான் அந்த பொண்ணை பாத்தேன்..
சினிமா நடிகை அஞ்சலி சாயல்ல
இருந்தது.. ( ஹி., ஹி., போட்டோவுக்காக
எப்படி லாஜிக்கா ஒரு வரி சேர்த்தேன்
பார்த்தீங்களா..? )
" என்னா சகலை நீங்க... என்னை விட சீனியர்,
நம்ம சொந்தக்காரங்க யார் யார்னு தெரிஞ்சி
வெச்சிக்க வேணாமா..? "
" ஓ... அப்ப நீங்க சொந்தகாரங்களை
தெரிஞ்சிக்க தான் கேக்கறீங்க..?! "
" எக்ஸாக்ட்லி..! "
" அப்ப முன் வரிசையில் வெள்ளை சட்டை
போட்டுட்டு, ஒரு தாத்தா இருக்காரே..
அவர்ல இருந்து ஆரம்பிக்கலாம் வாங்க..! "
" விளையாடாதீங்க சகலை... சொல்லுங்க..! "
" நிஜமாலுமே தெரியலை.. ஒருவேளை
பொண்ணு வீட்டு சொந்தமா இருக்கும்..! "
" சான்ஸே இல்ல.. பொண்ணோட அண்ணனை
பிடிச்சி விசாரிச்சிட்டேன்.. அவங்க சைடு
இல்லன்னு சொல்லிட்டான்..! "
( ஆஹா.. ஒரு மார்க்கமாத்தான்யா இருக்காரு..! )
" சரி அப்ப உங்க Wife-கிட்ட கேளுங்க..! "
" அவ தெரிஞ்சாலும் சொல்ல மாட்டா.. "
" அப்ப என் Wife மாலாகிட்ட கேளுங்க..,
அவளுக்கு தெரியும்.. "
" சரி இருங்க.. கேட்டுட்டு வரேன்.. "
நானும் பாத்துட்டுடே இருந்தேன்..
என் Wife-கிட்ட போயி என்னமோ
ரகசியமா பேசினாப்ல..
கொஞ்ச நேரத்துல சந்தோஷமா வந்தாரு
" சக்ஸஸ்... கண்டுபிடிச்சிட்டேன்..! "
" ஆமா.. இவரு பெரிய எடிசனு...
கரண்ட் கண்டுபிடிச்சிட்டாரு..!! "
" எப்படியோ கண்டுபிடிச்சோம்ல..! "
" ஆமா என் பொண்டாட்டிக்கிட்ட போயி
என்னான்னு சொல்லி கேட்டீங்க..? "
" அந்த பச்சை கலர் சுடிதார் போட்ட
பொண்ணு யாருன்னு சகலை உங்ககிட்ட
கேக்க சொன்னார்னு சொன்னேன்..!! "
" அடப்பாவி மனுஷா..?!!! "
டிஸ்கி : எதோ என் பொண்டாட்டிக்கு
பப்ளிக்ல புருஷனை அடிக்கிற கெட்ட பழக்கம்
இல்லாததால அன்னிக்கு நான் தப்பிச்சேன்..
.
.
Tweet