ராத்திரி 9 மணிக்கு கூட ரோட்ல தேங்காவை
டமார், டமார்னு போட்டு உடைக்கறாங்க..
( பாவம் அவங்களுக்கு இப்பதான் மெசேஜ்
வந்ததுச்சி போல..! )
என்ன புரியாம பார்க்கறீங்க...?
ஓ..! உங்களுக்கு மேட்டரே தெரியாதா..?
அட., கிருஷ்ணகிரில ஒரு குழந்தை பிறந்த
அரைமணி நேரத்துல பேசிச்சாம்..
அதுவும் " 4000 குழந்தைகளை காவு
வாங்குவேன்னு " சபதம் வேற போட்டுச்சாம்..
( பெரிய ரவுடி குழந்தையா இருக்குமோ..! )
அதுக்கு " வீட்ல இருக்குற குழந்தைளுக்கு
திருஷ்டி கழிச்சி தேங்கா வெச்சி உடைக்கணும்..! "
இதான் பரிகாரம்.
ஏன் சிரிக்கறீங்க..? நம்ப முடியலையா..?
என்னா பாஸ் நீங்க..
" பிள்ளையார் சிலை பால் குடிக்குதுன்னு "
சொன்னப்ப பால் டம்பளரை எடுத்துட்டு
ஓடினோம்..
அப்ப உங்களுக்கு சிரிப்பு வரலை..
" அக்கா , தங்கச்சிகளுக்கு பச்சை கலர்ல
சேலை எடுத்து தரணும்னு " சொன்னப்ப..
எடுத்து தந்தோமே..
அப்ப சிரிப்பு வரலை..
இப்ப மட்டும் உங்களுக்கு சிரிப்பு வருதாக்கும்..?!
ஆனா ஒண்ணு பாஸு..
நல்லவேளையா பரிகாரம் சொன்னவன்
தேங்காயை உடைங்கன்னு மட்டும் சொன்னான்..
தப்பி தவறி அவங்க அவங்க புருஷன்
தலையில உடைங்கன்னு சொல்லி இருந்தா
என்ன ஆவறது..?!!
அவ்வ்வ்..!!
டிஸ்கி 1 : இது நம்ம ப்ளாக் வெர்சன்..
டிஸ்கி 2 : கொஞ்சம் டெவலப் செய்து
விகடனுக்கு எழுதியது படிக்க க்ளிக்....
நான் தான் அப்பவே சொன்னேன்ல..
.
.
Tweet