சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

26 January 2015

முயற்சி திருவினையாக்கும்..!!

இது குடியரசு தின விழா பேச்சு போட்டியில்
என் மகன் சூர்யா பேசியது..

தலைப்பு :  " முயற்சி திருவினையாக்கும்..!! "



வெற்றிக்கனிகள் கொட்டிக் கிடப்பதில்லை.,
சற்று எட்டித்தான் பறிக்க வேண்டும்...

அதுக்கு பெயர் தான் முயற்சி..!

ஹிஸ்டரி புக்கை புரட்டி பாத்தா..
கஜினி முகமது 16 தடவை தோத்து
போனான்னு எழுதியிருக்கும்...

ஆனா...

அவன் 16 தடவை முயற்சி பண்ணி,
17வது தடவை ஜெயிச்சாங்கிறது தான்
நாம இங்கே நோட் பண்ண வேண்டிய
மேட்டரு.. ...

இப்ப கூட்டி கழிச்சி பாருங்க.,
கணக்கு சரியா வரும்..!!

" வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா..
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா...!! "

இதுக்கு உதாரணம் சொல்லணும்னா..
தாமஸ் ஆல்வா எடிசன்...

அவர் பல்ப்பை எரிய வெக்கிற ஆராய்ச்சி
பண்ணிட்டு இருந்தப்ப.. 1000 தடவை.,
1000 உலோகங்களை பயன்படுத்தி
பார்த்தும் பல்பை எரிய வெக்க முடியல..

அதை பத்தி அவர்கிட்ட ஒரு ரிப்போர்டர்..

" 1000 தடவை முயற்சி பண்ணியும்
ஒண்ணுமே கண்டுபிடிக்கலையே.. இது
உங்களுக்கு வருத்தமா இல்லையா.? " னு
கேட்டாரு...

அப்ப எடிசன்...

" இல்லியே... நான் தான் எந்த எந்த
உலோகத்தை பயன்படுத்தினா பல்ப்
எரியாதுன்னு கண்டுபிடிச்சி இருக்கேனே" னு
சொன்னாரு..

அதுக்கு அப்புறம் விடாமுயற்சியோட
ஆராய்ச்சி பண்ணி பல்பை எரிய வெச்சாரு...

அதுமட்டுமா..

பல்ப், சினிமா., ஸ்பீக்கர்னு 1093 பொருளை
கண்டுபிடிச்சாரு...

இதே மாதிரி தான்..

ரைட் ப்ரதர்ஸ் ஏரோபிளேன் கண்டுபிடிச்சப்ப.,
அது நியூஸ் பேப்பர்ல ஒரு சின்ன பெட்டி
செய்தியாதான் வந்தது....

கிரஹாம் பெல் டெலிபோன் கண்டுபிடிச்சப்ப..
" இதையெல்லாம் யார் யூஸ் பண்ண
போறா.? " னு அவரை கிண்டல் பண்ணினாங்க..

ஆனா.. அவங்க அதையெல்லாம் கண்டுக்காம
முயற்சி செஞ்சி அதுல வெற்றி அடைஞ்சாங்க..

இதை தான்..

" முயற்சி பண்றவன் சிக்ஸர் அடிக்கறான்..,
வேடிக்கை பார்க்கறவன் லெக்சர் அடிக்கறான்னு "
சொல்லுவாங்க..

இவ்ளோ ஏன்...

நம்ம காந்திஜி மட்டும் வக்கீல் தொழில்
செஞ்சிட்டு சந்தோஷமா இருந்திருந்தா...
நாம இன்னிக்கு சந்தோஷமா இருந்து
இருக்க முடியுமா..?!

நமது சுதந்திரம் காந்தியின் விடா முயற்சி...

அதனால தான் சொல்றாங்க..

மூச்சு விடறவன் எல்லாம் மனுஷன்
இல்ல..,
முயற்சி செய்யறவன் மட்டும் தான்
மனுஷன்னு..

சுற்றும் வரை பூமி.,
சுடும் வரை நெருப்பு.,
போராடும் வரை மனிதன்..
நீ மனிதன்...

போராடு... வெற்றி பெறும்வரை போராடு..!!

நன்றி..!!

பின் டிஸ்கி : முதல் பரிசு..!!!

3 Comments:

தாஸ். காங்கேயம் said...

மிக மிக அருமை..
வாட்ஸ் அப் -ல் பகிர்ந்து கொள்ளலாமா?
தாஸ், திருப்பூர்

Online Jobs for Tamil People said...

முதலீடு இல்லாமல் Onlineல் தினமும் 100ரூபாய் உறுதியாக சம்பாரிக்க மூடியும்! மேலும் விவரங்களுக்கு - http://www.bestaffiliatejobs.blogspot.in/2015/01/paidverts-earning-opportunities-in-tamil.html

விஸ்வநாத் said...

ஒங்க மனைவி ரொம்ப இன்டெலிஜென்ட் போலிருக்கு ....