சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

20 January 2010

சின்ன சின்ன கவிதைகள்



ஊருக்கே
ஜோசியம் சொன்ன
ராமசாமி ஜோசியருக்கு
தெரியாது..,
மகனிடம் இருந்து
இந்த மாசமாவது
பணம் வருமா என்பது..!

( ஆனந்த விகடனில் பிரசுரமானது...)

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

குழந்தையை
அடித்துவிட்டால்
அழும் -
அம்மாவின் மனசு..!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
.

2 Comments:

Anonymous said...

குழந்தையை
அடித்துவிட்டால்
அழும் -
அம்மாவின் மனசு....i don't think the mother would weep bcz.of beaten up by kuzhanthai...but, definitely she will feel, if she is beaten by her grown up son/daugher..

cheena (சீனா) said...

நல்ல கருத்துடைய குறும்பாக்கள்

உண்மை உண்மை

நல்வாழ்த்துகள் வெங்கட்