சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

06 December 2010

லைட்டா சிரிங்க - 3























( படித்ததில் பிடித்தது. )

No : 1

நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு
இருக்கிற பையனை போட்டு
இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்..,
Exam-க்கு கூட போகாம
ஒக்காந்து படிச்சிகிட்டே
இருக்கான்..!!!

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No: 2

உன் பேரு என்ன..?

" சௌமியா "

உங்க வீட்ல உன்னை எப்படி
கூப்பிடுவாங்க..?

தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,
பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No : 3 ( இண்டெர்வியூ.. )

உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?

சுவிஸ்சர்லாந்து..

எங்கே Spelling சொல்லுங்க..

ஐயையோ.. அப்படின்னா " கோவா "

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No : 4

( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா
வாங்க கடைக்குச் போறான். )

கடைக்காரர் : சார் உங்களுக்கு
கல்யாணம் ஆயிடுச்சா...?

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல
எங்க அம்மாவா என்னை பீட்ஸா
வாங்க அனுப்புவாங்க...!??

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No : 5

நடிகர் : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு
மக்களுக்கு பொதுசேவை பண்ணலாம்னு
இருக்கேன்..

நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே
அது மக்களுக்கு பண்ற பொதுசேவை
தானே சார்..!!

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *

டிஸ்கி :
லைட்டா சிரிங்க - 1  
லைட்டா சிரிங்க -
.
.

57 Comments:

Philosophy Prabhakaran said...

கோவா spelling gova தானே...

ரசிகன் said...

Rasigan (Me the First)!!!! :-)

Philosophy Prabhakaran said...

// பின்ன.. இந்த புயல் மழைல
எங்க அம்மாவா என்னை பீட்ஸா
வாங்க அனுப்புவாங்க...!?? //

சிரிக்க கூடாது மக்களே... சிந்திக்கணும்...

Philosophy Prabhakaran said...

// நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே
அது மக்களுக்கு பண்ற பொதுசேவை
தானே சார்..!! //
விஜய் தானே...

ரசிகன் said...

நீங்க Choose பண்ணின Photoல இருக்கற பொண்ணு கூட நீங்க சொல்றத கேக்க மாட்டேங்குது... லைட்டா சிரிம்மான்னா கெக்கே பிக்கேன்னு சிரிக்குது... What to do..?

ரசிகன் said...

//நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே
அது மக்களுக்கு பண்ற பொதுசேவை
தானே சார்..!!//

நீங்க‌ க‌டிக்க‌ற‌தை நிறுத்தினா அது உங்க‌ ஊர் சேவை எங்க‌ ஊர் சேவை இல்ல‌.. உல‌க‌ப் பொது சேவை.. ஒப்புய‌ர்வில்லா த‌மிழ்(தமிழர்) சேவை.. செஞ்சி பாருங்க‌.. உல‌க‌ ச‌மாதான‌த்திற்கான‌ நோப‌ல் ப‌ரிசு கிடைச்சாலும் கிடைக்கும்..

£€k#@ said...

Husband asks, Do you know the meaning of “WIFE.”
It means…Without Information Fighting Every time!
WIFE says No, it means – With Idiot for Ever

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

A sardar gave an Ad in matrimonial column
“PATNI CHAHIYE”
He got 1000 replies all saying– ‘Meri Le JA. …

ha ha ha
//லைட்டா சிரிங்க//

sirichitomm

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெங்கட் சொன்னது… 20

விஜயகாந்த் கொடுமைய விட
இவர் கொடுமை தாங்க முடியலையே..அவர் ஒரு படம் எடுத்து கொடுமை பன்ணினா.. இவர் அதை பத்தி 5 பதிவு போட்டு கொல்றாரே..!!
///

சிபி செந்தில்குமார் கொடுமைய விட
இவர் கொடுமை தாங்க முடியலையே..

அவர் மொக்கயாய் மொக்கையார் நிறைய

ஜோக்ஸ் எழுதி எழுதி கொடுமை

பன்ணினா.. இவர் லைட்டா சிரிங்க 1,2,3 ன்னு

பதிவு போட்டு கொல்றாரே..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//உன் பேரு என்ன..?

" சௌமியா "

உங்க வீட்ல உன்னை எப்படி
கூப்பிடுவாங்க..?

தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,
பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,////

பக்கத்து தெருவுல பக்கத்து ஊர்ல இருந்தா எப்படி கூப்பிடுவாங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு
இருக்கிற பையனை போட்டு
இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்..,
Exam-க்கு கூட போகாம
ஒக்காந்து படிச்சிகிட்டே
இருக்கான்..!!!///

இது 1960 ல வெங்கட்டோட அப்பா அவரோட நண்பர்கிட்ட சொன்னது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா
வாங்க கடைக்குச் போறான். )

கடைக்காரர் : சார் உங்களுக்கு
கல்யாணம் ஆயிடுச்சா...?

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல
எங்க அம்மாவா என்னை பீட்ஸா
வாங்க அனுப்புவாங்க...!??////

Mrs. Venkat சீக்கிரம் சீக்கிரம் இவரை ஹாஸ்பிட்டலுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்திடுச்சு. எடுங்க அந்த பூரிக்கட்டையை...

பெசொவி said...

உண்மைய சொல்லுங்க, அந்த முதல் ஜோக் பையன் நீங்கதான?
(படிச்சிகிட்டிருந்தது கூட கதை புக் தான?)

பெசொவி said...

//No : 3 ( இண்டெர்வியூ.. )

உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?

சுவிஸ்சர்லாந்து..

எங்கே Spelling சொல்லுங்க..

ஐயையோ.. அப்படின்னா " கோவா "//

உங்க இன்டர்வியூ கதை எல்லாம் இங்க ஏன் சொல்றீங்க?
(அதுக்காக, "என் இன்டர்வியூ தான், பதில் சொன்னது நீங்கதான்" அப்படின்னு பதில் கமென்ட் போட்டு சமாளிக்காதீங்க)

பெசொவி said...

//கடைக்காரர் : சார் உங்களுக்கு
கல்யாணம் ஆயிடுச்சா...?

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல
எங்க அம்மாவா என்னை பீட்ஸா
வாங்க அனுப்புவாங்க...!??//

கடைசியில பீட்ஸா கிடைச்சுதா இல்லையா, அதை சொல்லுங்க!

இம்சைஅரசன் பாபு.. said...

லைட்டா என்ன சத்தமாகவே சிரிக்கலாம் ........நல்ல இருக்கு மக்கா ............

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இம்சைஅரசன் பாபு.. said...

லைட்டா என்ன சத்தமாகவே சிரிக்கலாம் ........நல்ல இருக்கு மக்கா ............///

தம்பி பாபு, ஷாலினி மாதிடியே ஜால்ரா அடிக்க வெங்கட் எவ்ளோ கொடுத்தாரு?

Shalini(Me The First) said...

@rasigan
//Rasigan (Me the First)!!!! :-)//

ha ha ha
தொப்பி தொப்பி...
ரசிகன் உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாதாம்!
இதுல அண்ணாந்து பார்த்துட்டு மீ த பருந்துங்க கூடாது :)))

Shalini(Me The First) said...

To all,
i cant open the comment page of our blog :(
i tried other browsers but cant open still..
yarpa sooniyam vachinga :(

ennappa panrathu?!

Shalini(Me The First) said...

@ramesh
//
பக்கத்து தெருவுல பக்கத்து ஊர்ல இருந்தா எப்படி கூப்பிடுவாங்க?//

mobileல கூப்பிடுவாங்க..

@பெ.சொ.வி
//
கடைசியில பீட்ஸா கிடைச்சுதா இல்லையா, அதை சொல்லுங்க!//

அததான் நீங்க பறிச்சுட்டு போய்டீங்களே!

@ரமே
//தம்பி பாபு, ஷாலினி மாதிடியே ஜால்ரா அடிக்க வெங்கட் எவ்ளோ கொடுத்தாரு?//

வானம் அளவு அன்பு போலீஸ், அன்பு!
உடனே அவர் யாருங்காதிங்க
எப்டி தான் உங்கள உங்க வீட்ல வச்சு மேய்க்கிறாங்களோ ஸோ ஸேட்!

NaSo said...

//philosophy prabhakaran said...

// நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே
அது மக்களுக்கு பண்ற பொதுசேவை
தானே சார்..!! //
விஜய் தானே...//

இல்லை. அது நம்ம சிரிப்பு போலீஸ் நண்பர் டாக்டர் கேப்டன் விஜயகாந்த்.

karthikkumar said...

உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?

சுவிஸ்சர்லாந்து..

எங்கே Spelling சொல்லுங்க..

ஐயையோ.. அப்படின்னா " கோவா "///
சூப்பர். எல்லாம் அனுபவமா

அருண் பிரசாத் said...

//Shalini(Me The First) said...

@rasigan
//Rasigan (Me the First)!!!! :-)//

ha ha ha
தொப்பி தொப்பி...
ரசிகன் உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாதாம்!
இதுல அண்ணாந்து பார்த்துட்டு மீ த பருந்துங்க கூடாது :))) //

me the first...பத்தி நீங்க பேசுறீங்க... கலிகாலம்டா...

// To all,
i cant open the comment page of our blog :(
i tried other browsers but cant open still..
yarpa sooniyam vachinga :(

ennappa panrathu?!//

முதல்ல இண்டர்நெட் பில்லுக்கு பணத்தை கட்டுங்க... எல்லாம் சரியா தெரியும்

அருண் பிரசாத் said...

@ ஆல்

நான் சிரிக்க மாட்டேன் (சிரிக்க இங்க ஜோக்கே இல்லை. அதுவேற விஷயம்)... “லைட்டா சிரிங்க- 2”லயே சிரிச்சா பார்ட் 3 போட கூடாதுனு சொன்னேன்... ஆனால், பார்ட் 3 போட்டு கடுப்படிக்கிறார்...

Arun Prasath said...

நல்லா சிரிக்கலாமே.... ஏன் லைட்டா சிரிக்கணும்?

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா....

Madhavan Srinivasagopalan said...

அட.. ரொம்ப கஷ்டப் பட்டு யோசிச்சு இதுக்கு கமெண்டு எழுதி போஸ்ட் கூட பண்ணினேனே.. இங்கிட்டு காணுமே..
வேற எந்த பதிவிலாவது போஸ்ட் பண்ணிட்டேனா ?

Ramesh said...

No : 1, No : 3.. செம...

நல்லாவே சிரிச்சேன்..

Madhavan Srinivasagopalan said...

அஹா.. நல்லா இருக்கு.. இதப்போலவே (இதையே இல்லை) தொடர்ந்து எழுதுங்கள்.. நன்றி..

ரசிகன் said...

@ philosophy prabhakaran

//கோவா spelling gova தானே...

சார்.. உங்களுக்கு Spelling check பண்ணனும்னா Dictionaryலயோ Netலயோ தேடி இருக்கலாம்ல.. இப்படி கமெண்ட்ல கேட்டா மட்டும் நம்ம பதிவருக்கு english தெரிஞ்சிடுமா என்ன..? எனக்கு தொப்பி தந்தது தான் மிச்சம்.. இந்த ஷாலினி பொண்ணு ஒண்ணுமே இல்லன்னாலே ஒம்போது நாளைக்கு சிரிக்கும்.. :-( சரி விடுங்க மழைல தலை நனையாம இருக்க use ஆகும்..

Shalini(Me The First) said...

@Arun
//
me the first...பத்தி நீங்க பேசுறீங்க... கலிகாலம்டா...
//


அறிவாளிகளுக்கான விளையாட்டை பற்றி நீங்க போஸ்ட் போட்ரீங்கல்ல அப்ப கலிகாலம் தான் கண்டிப்பா

//
முதல்ல இண்டர்நெட் பில்லுக்கு பணத்தை கட்டுங்க... எல்லாம் சரியா தெரியும்//

அட அட என்ன ஒரு சொலுசன் சொலீடீங்க

//ஆனால், பார்ட் 3 போட்டு கடுப்படிக்கிறார்..//

என்னது ஜோக் படிச்சா கடுப்பு வருதா?!
மிஸஸ் அருண் கொஞ்சம் இத என்னான்னு கேளுங்க

வெங்கட் said...

@ ரசிகன்.,

// Rasigan (Me the First)!!!! :-) //

இது Copyright Violation...

" Me the First " - இதை VAS சார்பா
ஷாலினி பெயர்ல Copyright Reg
பண்ணி மூணு மாசம் ஆகுது..

அதனால தான் மொத்த பதிவுலகமே
இப்ப " Me the First " விட்டுட்டு
" வடை எனக்கேன்னு " மாறிடுச்சு.

இந்த ஒரு காரணத்துக்காகவே
உங்க மேல சைபர் கிரைம்ல
Complaint பண்ண முடியும்.!!

இருந்தாலும் அப்பப்ப VKS-ல
நடக்கிற சதிகளை பத்தி எங்களுக்கு
தகவல் சொல்ற ஆளா இருக்கறதால..
உங்களை விட்டுடறோம்..

வெங்கட் said...

@ பிரபாகரன்.,

// நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே
அது மக்களுக்கு பண்ற பொதுசேவை
தானே சார்..!! //

// விஜய் தானே... //

விஜய்யா..? அவரு எப்ப இருந்து
நடிக்க ஆரம்பிச்சாரு..?!!

வெங்கட் said...

@ லேகா.,

// WIFE says No, it means – With Idiot for Ever //

ஹா., ஹா., ஹா..!!

" லேகா நல்லவங்களா..? கெட்டவங்களா..? "
# ஒரு குழந்தையின் டவுட்..

* குழந்தை = நான் தான்.

R. Gopi said...

சூப்பர்.

பீட்சா மேட்டர் கலக்கல். கோவா மேட்டர் கலக்கல். ஆமா கோவாவுக்கு என்ன ஸ்பெல்லிங். gova தானே?

எஸ்.கே said...

நான் கொஞ்சம் dark-ஆகவே சிரிச்சிட்டேன்!
நல்லாயிருந்ததுங்க!

ராஜி said...

கோவா, பீட்ஸா ஜோக் மட்டும்தான் புதுசு. மத்ததெல்லாம் 80ல வந்த ஜோக்

சி.பி.செந்தில்குமார் said...

vengkat 1.பதிவு சூப்பர்

2.ஜோக்ஸ் எல்லமே அருமை

3.அட்டகாசம்

மேலே சொன்னவற்றில் ஏதாவது ஒன்றையாவது பிரசுரம் பண்ணவும்.(ஆனந்த விகடன்ல கூட 100 ஜோக்ஸ் அனுப்புனா 2 ஜோக்காவது பிரசுரம் பண்ணிடறாங்க,உங்க அலும்பு தாங்கலையே?)

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெங்கட் சொன்னது… 20

விஜயகாந்த் கொடுமைய விட
இவர் கொடுமை தாங்க முடியலையே..அவர் ஒரு படம் எடுத்து கொடுமை பன்ணினா.. இவர் அதை பத்தி 5 பதிவு போட்டு கொல்றாரே..!!
///

சிபி செந்தில்குமார் கொடுமைய விட
இவர் கொடுமை தாங்க முடியலையே..

அவர் மொக்கயாய் மொக்கையார் நிறைய

ஜோக்ஸ் எழுதி எழுதி கொடுமை

பன்ணினா.. இவர் லைட்டா சிரிங்க 1,2,3 ன்னு

பதிவு போட்டு கொல்றாரே..!!


என் வீட்டுக்கு வந்து என்னை கேவலப்படுத்துனீங்க,சரி போனாப்போகுதுன்னு விட்டுட்டேன்,இப்படி போற வர்ற பிளாக்ஸ்ல எல்லாம் என்னை கேவலப்படுத்தனுமா?

(இதை கண்டிப்பா வெங்கட் போட்டுடுவாரு,ஏன்ன்னா இதனால அவமானம் எனக்குத்தானே)

சி.பி.செந்தில்குமார் said...

கோகுலத்தில் சூரியன் வெங்கட் பிளாக்கில் கமெண்ட் போடுவது எப்படி? அப்படின்னு ஒரு மேட்டர் எழுத்ட்டு இருக்கேன்

சி.பி.செந்தில்குமார் said...

>>>Madhavan Srinivasagopalan said...

அஹா.. நல்லா இருக்கு.. இதப்போலவே (இதையே இல்லை) தொடர்ந்து எழுதுங்கள்.. நன்றி..

என்ன ஒரு ஆச்சரியம்?வெங்கட்டை நக்கல் அடிச்சும் அதை அவர் மாடரேட் பண்ணாம போட்டுட்டாரே? தூக்கக்கலக்கமோ?

ஜெயந்த் கிருஷ்ணா said...

கடைசி ஜோக் அவர பற்றி சொன்னதில்லையே.. அட அவரு தாம்பா..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// உல‌க‌ ச‌மாதான‌த்திற்கான‌ நோப‌ல் ப‌ரிசு
கிடைச்சாலும் கிடைக்கும்.. //

நோபல் பரிசா..? வேணாம்..!!

ஏற்கனவே வீட்ல அஞ்சு - ஆறு இருக்கு.
அதையே என்ன பண்றதுன்னு தெரியாம
என் பசங்களுக்கு ஆளுக்கொன்னா
விளையாட குடுத்துட்டேன்..

போங்கப்பா போயி இந்த வருஷமாவது
வேற யாருக்காவது குடுங்கப்பா..
சும்மா., வருஷா வருஷம் நமக்கே
குடுத்துகிட்டு.. போரடிக்குது..!

ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// இது 1960 ல வெங்கட்டோட அப்பா
அவரோட நண்பர்கிட்ட சொன்னது... //

இப்படி பக்கத்துல நின்னு பாத்ததை
அப்படியே போட்டு குடுத்திட்டீங்களே
சித்தப்பா ....?!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// Mrs. Venkat சீக்கிரம் சீக்கிரம் இவரை
ஹாஸ்பிட்டலுக்கு அனுப்ப வேண்டிய
நேரம் வந்திடுச்சு. எடுங்க அந்த பூரிக்கட்டையை... //

ஓ.. புரியுது.. புரியுது..!!

பீட்ஸா சாப்பிட்டா உடம்பு கெட்டு
போயிடும்.. அப்புறம் டாக்டரை பாக்க
ஹாஸ்பிட்டல் போகணும்..

அங்கே அவர் குடுக்கற மாத்திரையை
பெரிசா இருந்தா அதை தூள் பண்ணி
சாப்பிடணும்.. அதுக்கு பூரிக்கட்டை வேணும்..
அப்படித்தானே..?!!

ஆஹா.. என்னே உங்கள் முன்யோசனை..
புல்லரிக்குதுப்பா..!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// உங்க இன்டர்வியூ கதை எல்லாம்
இங்க ஏன் சொல்றீங்க? //

அப்படி சொன்னாலாச்சும் நீங்க
Interview போகும்போது Atleast
" கோவா" வுக்காவது Spelling
மனப்பாடம் பண்ணிட்டு
போவீங்கன்னு தான்..

வெங்கட் said...

@ ஷாலினி.,

// Ramesh said.,

பக்கத்து தெருவுல பக்கத்து ஊர்ல
இருந்தா எப்படி கூப்பிடுவாங்க? //

// Mobileல கூப்பிடுவாங்க.. //

ஹா., ஹா., ஹா..!!

என்ன இன்னிக்கு VKS -காரங்க
எல்லாம் தானா வந்து வாயை குடுத்து
தொப்பி வாங்கிட்டு போறாங்க..

ஒருவேளை மழை அதிகமா
இருக்கறதால பிளாட்பாரத்துல
தொப்பி கடை எதாவது போடுற
ஐடியா இருக்குமோ..!!?!!

வெங்கட் said...

@ ஷாலினி.,

// வானம் அளவு அன்பு போலீஸ் //

அப்படி நல்லா உறைக்கிற மாதிரி
சொல்லுங்க..

@ ரமேஷ்.,

உங்களை மாதிரி சிங்கிள் " டீ " க்காகவோ.,
ஒரு ரூபா காசுக்காகவோ ஒண்ணா
சேர்ந்தவங்க இல்ல நாங்க..

நாங்கல்லாம் உண்மையான அன்பால
இணைந்தவங்க..

" அன்பு மலர்களே.,
இணைந்து இருங்களே.. - நாளை நமதே..!! "
இது தான் VAS-ன் தீம் Song..

வெங்கட் said...

@ நாகராஜ சோழன்.,

// அது நம்ம சிரிப்பு போலீஸ் நண்பர்
டாக்டர் கேப்டன் விஜயகாந்த். //

நண்பர் மட்டுமா..

விருதகிரி படம் ரிலீஸ் ஆகறதுக்கு
முன்னாடியே எவ்ளோ கொலை மிரட்டல்
வந்தாலும் அதை கண்டுக்காம அதை பத்தி
5 பதிவு போட்டவராச்சே
நம்ம போலீஸ்..

இவர் தான் கேப்டனுக்கு
Right Hand ., Wrong Hand ..ஓ.. சாரி
Left Hand எல்லாம்..

வெங்கட் said...

@ அருண்.,

// கலிகாலம்டா... //

ஆமாம்., ஆமாம்..
இல்லையா பின்ன..

எட்டாங்கிளாஸ் அஞ்சு தடவை
படிச்சும் கடைசிவரை Pass ஆகாத
நீங்கல்லாம் ஆசிரியரா ( வலைசரம்ல )
இருந்தீங்கல்ல..

அப்ப இது சத்தியமா கலிகாலம் தான்..!!

வெங்கட் said...

@ அருண்.,

// நான் சிரிக்க மாட்டேன் //

நல்ல வேளை நீங்க எங்க
சிரிச்சிடுவீங்களோன்னு பயந்தே
போயிட்டேன்..!!

// சிரிக்க இங்க ஜோக்கே இல்லை.
அதுவேற விஷயம் //

இங்கே ஜோக்கே இல்லைங்கறதை
கண்டுபிடிச்ச புத்திசாலி ( அப்படின்னு
தன்னை நினைத்துக்கு கொள்ளும் )
அருணுக்கு எல்லோரும் ஜோரா
ஒரு தடவை கைதட்டுங்க பாக்கலாம்..

( ஏய்... யாருப்ப அங்கே
சில்லரை காசு போடுறது.. )

Anonymous said...

* குழந்தை = நான் தான்
:O OMG

செல்வா said...

// ரசிகன் said...
நீங்க Choose பண்ணின Photoல இருக்கற பொண்ணு கூட நீங்க சொல்றத கேக்க மாட்டேங்குது... லைட்டா சிரிம்மான்னா கெக்கே பிக்கேன்னு சிரிக்குது... What to do..?

//

உங்க காது அவ்ளோ ஷர்ர்பா...? போட்டோவ பார்த்துட்டு சவுண்ட் வருது அப்படின்னு சொல்லி நீங்க VKS தான் அப்படிங்கிறத நிரூபிச்சிட்டீங்க ..!

Shalini(Me The First) said...

@செல்வா
//
உங்க காது அவ்ளோ ஷர்ர்பா...? போட்டோவ பார்த்துட்டு சவுண்ட் வருது அப்படின்னு சொல்லி நீங்க VKS தான் அப்படிங்கிறத நிரூபிச்சிட்டீங்க ..//

விடுங்க செல்வா இன்னிக்கு அவர் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய தொப்பி போட்ருக்கார்

Shalini(Me The First) said...

ennappaa enakku yaarum help panna maatingala?
:((((
mmmmmmmmmm
me sobbing
mmmmmmmmmm

MANO நாஞ்சில் மனோ said...

//உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?

சுவிஸ்சர்லாந்து..

எங்கே Spelling சொல்லுங்க..

ஐயையோ.. அப்படின்னா " கோவா "//

ஐய்யயோ அப்போ எருமைநாயக்கன்பட்டிக்கும் ஸ்பெல்லிங் கேப்பாய்ங்க்களோ..?

MANO நாஞ்சில் மனோ said...

//இல்லன்னாலே ஒம்போது நாளைக்கு சிரிக்கும்//
நல்லாயிருக்கே....:]]

Thamira said...

ஒவ்வொன்றும் டாப் ரகம். உங்கள் பதிவுக்கு வந்தால் சிரிப்பு கேரண்டி. :-))