சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

28 January 2010

தலைக்கு மேல வேலை


தலைக்கு மேல வேலை வந்தாலே.,
நான் Tension ஆயிடுவேன்..

மாசம் ஒரு தடவை
சலூனுக்கு போகணுமே.,
அதை சொன்னேன்..

இதெல்லாம் கஷ்டமான்னு
சில பேர் கேட்பாங்க..

" ஒரு ஆம்பளையோட கஷ்டம்.,
இன்னொரு ஆம்பளைக்கு தான்
தெரியும்..!! "

நான் சலூனுக்கு போற அன்னிக்கு தான்
ஊர்ல பாதி பேருக்கு முடி வெட்டிக்கலாம்னு
தோணும் போல..

எனக்கு முன்னாடியே வந்து
உட்கார்ந்து இருப்பாங்க..

அங்கே ஒரு நியூஸ் பேப்பர் இருக்கும்..,
அதை நான் படிக்கிறதே இல்லை..

( எப்படியும் எல்லோரும்
பிச்சி எடுத்ததுபோக.,
எனக்கு " வரி விளம்பரம் "
இருக்கிற பக்கம் தான் கிடைக்கும்.. )

அங்கே சின்ன பசங்களை கூட்டிட்டு
வர்ற அப்பாக்கள் பண்ணுற
ரவுசு இருக்கே.. அப்பப்பா..!

கத்திரி தேய தேய வெட்டினாலும்
" இங்க வெட்டுங்க..,
அங்கே வெட்டுங்கன்னு "
ஒரே இம்சைதான்.

அதுக்கு பேசாம " மொட்டை அடின்னு "
சொல்லிட்டா ஒரே வேலையா
போயிடும்ல..

அப்புறம் இந்த பெருசுங்க..
உள்ளூர் அரசியல்ல இருந்து
ஒபாமா வரைக்கும்
அலசுவாங்க பாருங்க..

நொந்து Noodles ஆகவேண்டியது தான்.

2-மணி நேரம் கழிச்சி தான்
என் முறை வரும்..

அப்ப நம்ம சலூன்காரர்
" சார்.. ஒரு டீ குடிச்சிட்டு வந்திடறேன்னு..! "
ஒரு அரை மணி நேரம் " எஸ் " ஆயிடுவார்..

அப்பல்லாம் எனக்கு
இப்படி தோணும்..

" எப்படிதான் இந்த பொண்ணுங்க
அடிக்கடி பியூட்டி பார்லர்
போறாங்களோ..!? "
.
.

4 Comments:

Anonymous said...

really all your jokes very good...

Anonymous said...

ஒரு ஆம்பளையோட கஷ்டம்.,
இன்னொரு ஆம்பளைக்கு தான் தெரியும்.! "

a new proverb!!!!!!!!???

anyhow, what you have narrated in this article is ture...everyone must have experienced..no exceptional...

வெங்கட் said...

Thanks for ur Comments

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

உண்மை - முடி திருத்தகத்துக்குச் செல்வது - ஒரு அனுபவம் தான். இதற்கும் ஒரு இடுகை போடலாம் என்று புரிந்து கொண்டேன். தவறில்லை

நல்வாழ்த்துகள் வெங்கட்