சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

25 February 2014

ஹி., ஹி... கொஞ்சம் எக்ஸ்ட்ரா...!!!


வெண்பொங்கல் பிரசாதம் வாங்க
க்யூல நிக்கும் போது...

வெண்பொங்கல் நெய் மணம் கமகமக்க
இருந்ததா....

எனக்கு உடனே கன நேரத்தில்
உதித்த ஒரு சிந்தனை...

கொஞ்சம் எக்ஸ்ட்ரா பக்தி காட்டுனா...
குருக்கள் நமக்கு ரெண்டு கப்பா
தருவாரோ...!!

சரி எதுக்கும் ட்ரை பண்ணி பார்ப்போம்..

" கோவிந்தா... கோவிந்தா...! "

குருக்கள் என்னை முறைச்சார்...
முறைச்சிட்டு...

" சாமி தரிசனம் பண்ணிட்டு வந்தா தான்
பிரசாதம் குடுப்பேன்... "

( எனக்கு ஆச்சர்யம் தாங்கல. )

" எப்டி சாமி கண்டுபிடிச்சீங்க.. ?!!! "

" அபிஷ்ட்டு... இது பிள்ளையார் கோவில்டா.! "

" பிரசாதம் கொடுத்தவுடனே பெருமாள் கோவில்னு
நினைச்சிட்டேன்.. ஹி., ஹி., ஹி..! "
.
.

2 Comments:

வெளங்காதவன்™ said...

கர்.....

த்து...

இந்தப் பொழப்புக்கு சாவலாம்.

விஸ்வநாத் said...

கோழி குருடா இருந்தாலு கொழம்பு ருசியா இருக்கான்னு தா பாக்கனு;