சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

25 December 2014

வித்துவானும் - கத்துவானும்..!!


ஒருத்தரு அவர் ப்ரெண்ட்டை பார்க்க
அவர் வீட்டுக்கு போறாரு..

நைட் லேட் ஆகிட்டதால அங்கயே
தங்கிடறாரு..

அந்த வீட்ல ஒரு வயலின் மட்டும்
தான் இருக்கு..

" ஏன்டா.. டைம்பாஸ்க்கு ஃபேஸ்புக்காவது
வரலாம்ல.. "

" டைம்பாஸா.. அதான் வயலின் இருக்கே..! "

" வீட்ல ஒரு டி.வி கூட இல்ல.. Bore
அடிச்சா என்ன பண்ணுவே..? "

" Bore அடிச்சாவா.. அதான் வயலின் இருக்கே... "

" அது சரி.. வீட்ல ஒரு Wall Clock கூட இல்ல..
டைம் எப்படி கண்டுபிடிப்பே..? "

" டைம்மா..? அதான் வயலின் இருக்கே.. "

அவருக்கு ஆச்சரியம்..

" வயலின் வெச்சி எப்படிடா டைம்
கண்டுபிடிப்பே..?! "

" இப்ப பாரேன்னு " சொல்லிட்டு அவர்
வயலின் எடுத்து வாசிக்க...

.
.
.

" நைட் 1 மணிக்கு கூட நிம்மதியா
தூங்க விட மாட்டியாடா...!! "

- பக்கத்து வீட்டில் இருந்து வந்தது குரல்..
.
.

3 Comments:

”தளிர் சுரேஷ்” said...

ஹாஹாஹா! சூப்பர்!

விஸ்வநாத் said...

Great;

Anonymous said...

என்னம்மா இப்டி பன்றீங்களமா!