சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

27 March 2014

யானைப்பால்..!!?



நேத்து என் சிஷ்யபுள்ள சிவசங்கர்
போன் பண்ணியிருந்தான்...

" தல.. நாங்க ப்ரெண்ட்ஸா சேர்ந்து
புதுசா ஒரு பதிப்பகம் ஆரம்பிக்க
போறோம்..!! "

" குட்.. குட்... எப்படிடா இந்த ஐடியா
வந்துச்சு..? "

" எல்லாம் தங்களிடம் குடித்த
யானைப்பால் தான் குருவே..!! "

( ஹி., ஹி., ஹி...!!! என் சிஷ்யன்டா..!! )

" சரி.. என்ன திடீர்னு பதிப்பகம் எல்லாம்
ஆரம்பிக்கறீங்க..? "

" பதிவர்கள் நிறைய பேரு புத்தகம்
வெளியிடணும்னு ஆசைப்படறாங்க..
அவங்களுக்காக தான்...!! "

" ஏற்கனவே பதிவர்கள் ஒரு பதிப்பகம்
ஆரம்பிச்சி இருக்காங்களே.. தெரியாதா..?!! "

" தல... நீ அந்த அளவு எனக்கு யானைப்பால்
தரல..!! "

" டேய்.. அடங்குடா...!! "

" ஹி., ஹி., ஹி.. எங்க பிஸினஸ் டெவலப்
ஆகறதுக்கு உங்க சப்போர்ட் வேணும்..!! "

" புரியலையே..!!

" நீங்க எழுதின இலக்கியம், கவிதை,
மர்மக் கதை எல்லாம் ஒரு பிரிண்ட்
எடுத்து குடுங்க....!! "

" வாவ்.. சூப்பர்... அப்ப உங்க பதிப்பகத்தோட
முதல் புக் என்னோடதுதானா..?!! "

" இல்ல தல... அதை நான் ABHK பப்ளிகேஷன்ல
குடுத்து தான் போட போறேன்...!! "

" அதாரு..?!! "

" அவன் தான் தல எங்க எதிரி..!! அனேகமா
அதான் அவன் கடைசி புக்கா இருக்கும்..!! "

" அடேய்ய்....!! "

#  யானைப்பால் ஓவரா போச்சோ...!?!
.
.

1 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... ஆப்பு வைக்க வெளியிலிருந்து ஆள் தேவையில்லை...!