அப்ப நான் ப்ளஸ் ஒன் படிச்சிட்டு
இருந்தேன்..
10-வது வரை பாய்ஸ் ஸ்கூலா
இருக்குற எங்க ஸ்கூல்..
+1, +2-ல மட்டும் Co-Ed..
அப்ப எங்க க்ளாஸ்லயும்
14 பொண்ணுங்க படிச்சாங்க..
ஒரு ஆறுமாசம் ஓடியிருக்கும்..
ஒரு நாள் கிரவுண்ட்ல நானும்.,
" பிதோகரஸ் தியரம் புகழ் " ஆனந்தும்
பேசிட்டு இருந்தோம்.
அப்ப எங்க ப்ரண்டு மோகன்
மூச்சு வாங்க ஓடி வந்தான்..
" டேய் உங்களுக்கு விஷயம் தெரியுமா.? "
" என்னடா விஷயம்..? "
" அடுத்த வருஷத்துல இருந்து +1, +2-க்கு
பொண்ணுகளை சேர்த்தறது இல்லன்னு
முடிவு பண்ணி இருக்காங்களாம்டா..! "
இதை கேட்டதும் ஆனந்த் ஷாக் ஆகி....
" யார்ரா இப்படி முடிவு பண்ணினது..? "
" எல்லாம் நம்ம மேனேஜ்மெண்ட்தான்.! "
" அடப்பாவிகளா..? "
" பீல் பண்ணாதடா.., நம்ம க்ளாஸ்ல
பொண்ணுங்க இருக்காங்கல்ல.... "
" அட ஏன்டா நீ வேற.., இதை போன வருஷமே
பண்ணியிருந்தா.. க்ளாஸ்ல பொம்பள புள்ளங்க
முன்னால எல்லாம் நாம அடி வாங்கி
அசிங்கப்படாம இருந்திருப்போம்ல..! "
( அட ஆமால்ல...!!! ஹி., ஹி., ஹி...! )
ஒவ்வொரு மனுஷனுக்கும்
ஒவ்வொரு பீலிங்...!!
.
.
Tweet
11 February 2013
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
// ஒரு ஆறுமாசம் ஓடியிருக்கும்
ஒரு மாசமா ஆறு மாசமா ? தெளிவா சொல்லுங்க நண்பா
// அட ஆமால்ல..
ஆமா வா ? இல்லியா ? தெளிவா சொல்லுங்க நண்பா
deng u
ஏதோ லவ் ஸ்டோரி இன்னு நினச்சு படிச்சா எனக்கு இப்படி பல்பு காட்டிட்டிங்களே நண்பா
எனது தளம்
சிவாவின் கற்றதும் பெற்றதும்
ஹா ஹா ஹா
Post a Comment