சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

16 December 2013

நம்ம ரேஞ்சே வேற...!!!


என் பையன் ஸ்கூல்ல Parents-க்கு
Craft Making Competition நடந்தது..

அதுல கலந்துகிட்ட என் Wife
Top 15-ல செலக்ட் ஆகிட்டாங்க..

Function-ல சேலம் கலெக்டர் வந்து
பரிசு தரபோறார்னு சொன்னாங்க..

இன்னிக்கு என் Wife கலெக்டர் கையால
பரிசு வாங்க போறாங்க...

அதுக்கு காரணம் நாம பண்ணின
ஹெல்ப் தான்னு நினைக்கும் போது
எனக்கு பெருமையா இருந்தது..

( Competition-ல கலந்துக்க நான் தான்
வண்டில கூட்டிட்டு போனேன்.. .
ஹி., ஹி., ஹி..!! )

Function 4 மணிக்கு.. நாங்க 3.45-க்கே
போயிட்டோம்.. ஆனா அப்பவே
ஆடிடோரியம் நிறைஞ்சி போச்சு..

பரிசு வாங்கறதால என் Wife-ஐ மட்டும்
முன்னாடி கூட்டிட்டு போயிட்டாங்க..

சரி விடு.. நம்மளது தான் ஜூம் கேமரா
ஆச்சே.. இங்கே இருந்தே போட்டோ
எடுத்துக்கலாம்னு கிடைச்ச சீட்ல
உக்காந்துகிட்டேன்..

டைம் ஆக ஆக கூட்டம் இன்னும்
ஜாஸ்தி ஆகிடுச்சு...

4.30 மணி வாக்கில சேலம் கலெக்டர்,
பிரின்சிபால் எல்லாம் ஹாலுக்கு
வந்தாங்க..

அப்ப நான் முன்னாடியே இருந்ததால
பிரின்சி சாருக்கு ஒரு வணக்கம்
வெச்சேன்... அவரும் லைட்டா ஸ்மைல்
பண்ணிட்டு போனாரு..

கொஞ்ச நேரத்துல ஸ்கூல் ப்யூன்
என்கிட்ட ஓடி வந்தாரு..

" சார்.. சார்.. உங்களை பிரின்சிபால் சார்
முன்னாடி வர சொல்றாரு..! "

( எனக்கு ஆச்சரியம்..!! நம்மள எதுக்கு
முன்னாடி வர சொல்றாரு.. சீப் கெஸ்டும்
வந்துட்டாங்களே... ஒரு வேளை பிரின்சி
நம்ம BLOG ரசிகரா இருப்பாரோ..?!!! )

" கூட்டமா இருக்கேங்க...!! "

" என்கூட வாங்க சார் நான் கூட்டிட்டு
போறேன்..! "

" சரி வாங்க போலாம்..!! "

ரெண்டு பேரும் ஸ்டேஜை நோக்கி
போனோம்... கூட்டமா மத்த Parents
வழில நின்னுட்டு இருந்தாங்க...

அப்ப அந்த ப்யூன்...

" எல்லோரும் கொஞ்சம் வழிவிடுங்க..
போட்டோகிராப்பர் வர்றாரு....!! "

" என்னாது போட்டோகிராப்பரா...?!!
அவ்வ்வ்வ்..!!! "
.
.

1 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் ரேஞ்(ச்)சு இதில் காண்பியுங்களேன்... நீங்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன் : -

தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி...

விளக்கம் :

http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html