சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

08 April 2014

சின்ன கல்லு.. பெத்த ஆப்பு..!!!




எங்க ஊருக்கு பக்கத்துல சித்தர்கோவில்னு 
ஒரு கோவில் இருக்கு.. 

மலைமேல கோவில்., கோவிலை சுத்தி 
நிறைய மரங்கள்னு.. ரம்மியமா இருக்கும்.

அமாவாசை நாள்னா கூட்டம் நிரம்பி 
வழியும்... 

அப்படித்தான் ஒரு அமாவாசை அன்னிக்கு
நானும் , என் ப்ரெண்ட் சிவாவும் 
கோயிலுக்கு போயிட்டு சாமி கும்பிட்டு 
வர்றோம்... 

ஒரு மரத்துக்கு கீழே உக்காந்துட்டு 
இருந்தான் எங்க ப்ரெண்ட் ரமணன்..
கூட ரெண்டு பேர் வேற இருந்தானுவ..

ஆனா சீரியஸா.. அந்த பக்கம் எட்டி எட்டி 
பாத்து என்னமோ பண்ணிட்டு இருந்தானுங்க..

அப்பவே எனக்கு தெரிஞ்சி போச்சு 
எதோ ரூட் விட்டுட்டு இருக்கானுவன்னு..

கிட்ட போயி... 

" என்னடா பண்ணிட்டு இருக்கீங்க..? "

" வாடா வெங்கி.. ஒண்ணுமில்ல சும்மா..! "

" சொல்லுங்கடா..! '

" ஹி., ஹி., ஹி.. அங்கே உக்காந்து இருக்குற 
பொண்ணு மேல ( சின்ன ) கல்லை போட்டுட்டு
இருக்கோம்..! "

அந்த பக்கம் யார்ரான்னு எட்டி பார்த்தேன்..

ஷாக் ஆகிட்டேன்.. 

என் காலேஜ்மேட் மீனா... 

" அடேய்... அது என் ப்ரெண்ட்டா..  "

" என்னாது உன் ப்ரெண்டா...?!! ஹப்பா..
இப்பதான் நிம்மதியா இருக்கு..?! "

" எதுக்குடா..?!! "

" தெரியாதவங்க யார் மேலயோ கல்லு
போடறோமேன்னு பீலிங்கா இருந்துச்சுல்ல..
ஹி., ஹி.,ஹி...!! "

" அடேய்.... அவங்க அண்ணன் இன்ஸ்பெக்டர்டா..! " 

இப்ப ரமணன் டென்ஷனாயிட்டான்...

" மச்சி., மச்சி... எதுனா பிரச்னை ஆகிடபோகுது 
எப்படியாச்சும் என்னை காப்பாத்தி விடுடா.. " 

" டோன்ட் வொர்ரி.. நான் முடிச்சிடறேன்..!! " 

மீனாகிட்ட போயி... 

" ரொம்ப கோவமா இருப்பேன்னு நெனச்சேன்..
இப்படி சிரிச்சிட்டு இருக்க..? "

" கோவமா எதுக்கு..? "

" அது... உன் மேல விழுந்துச்சில்ல கல்லு.. "

" கல்லா.. எம் மேல எந்த கல்லும் விழலையே..! "

"  நல்லா பாத்து சொல்லு.. இதா இந்த கல்லு..,
அதா அந்த கல்லு.. "

" உனக்கு என்ன பிரச்னை இப்ப..?!!  "

" ஒண்ணுமில்ல.. சரி உங்க அண்ணன் எங்கே..? "

" கோவிலை சுத்திட்டு வரேன்னு போயிருக்காரு "

" சரி., மறுபடியும் கேக்கறேன்.. உன்மேல எந்த
கல்லும் விழல..! "

" விழல.. விழல.. போதுமா..?!!! "

எனக்கு நிம்மதியா இருந்தது...

நான் உடனே ரமணனை பாத்து..

" டேய் ரமணா... நீ போட்ட கல்லு இவங்க
மேல படவே இல்லியாம்டா..!" னு சத்தமா
சொன்னேன்.. 

இப்ப அவன் முகத்துல ஒரு கொலவெறி
தெரிஞ்சது...

" ஹா., ஹா., ஹா...! ( வில்லன் சிரிப்பு ) "
.
.

3 Comments:

”தளிர் சுரேஷ்” said...

சூப்பர் ஆப்பு!

Unknown said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

Chandramozhi said...

ப்ரோ, நம்ம ஊர் கோவில் போட்டோ போடாம அது என்ன சம்பந்தமில்லாத போட்டோ போட்டிருக்கீங்க ?