நான் காலையில எந்திரிச்சதும்
என் தங்கச்சி மகன் அழற சத்தம்
கேட்டது...
அவன் 1வது படிக்கறான்.. ஒரு வாரம்
லீவ் முடிஞ்சி இன்னிக்கு ஸ்கூலுக்கு
போகணும்ல..
அதான் பயபுள்ள நேத்து நைட்ல இருந்து
சோகமா இருந்தானா...?!!
" ஆஆஆஆ.. நான் இன்னிக்கு ஸ்கூலுக்கு
போக மாட்டேன்... ஆஆஆஆ...!!! "
என் தங்கச்சி சமாதானம் பண்ணிட்டு
இருந்தா...
சரி நாமளும் நம்ம பங்குக்கு எதாவது
பண்ணலாம்னு போனேன்...
போயி...
" பார்ரா மாப்ள.. நீ ஒழுங்கா ஸ்கூலுக்கு
போயி., நல்லா படிச்சாதான்டா இந்த மாமா
மாதிரி பெரிய ஆளா வர முடியும்"
சொல்லி முடிக்கல... அழுகை சத்தம்
இன்னும் ஜாஸ்தியாச்சு...
என்ட்ரா இதுன்னு திரும்பி பாத்தா...
அழுதுட்டு இருந்தது என் தங்கச்சி...
( ஒரு வேளை ஆனந்த கண்ணீரா
இருக்குமோ..?!! )
.
. Tweet
2 Comments:
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-3.html) சென்று பார்க்கவும்... நன்றி...
கம்பெனி ரகசியசத்தை அடிச்சு கூட கேப்பாங்க... சொல்லாதிங்க பாஸ்....;)
Post a Comment