சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

16 August 2013

எழுத்தாளனும், பிரியாணியும்..!!


இன்னிக்கு என் ரசிகை (?!) ஒருந்தவங்க
சாட்ல என் நம்பர் கேட்டு போன்
பண்ணியிருந்தாங்க..

இப்ப எதுக்கு அப்படி டவுட்டா பார்க்கறீங்க..?!

ஒரு பிரபல எழுத்தாளரா இருந்தா
ரசிகைகள் கடிதம் எழுதறதும்,
போன் பண்றதும் சகஜம் தானே...!!

சரி மேட்டர்க்கு வரேன்...

பேசும் போது... " வெங்கட் நீங்க சூப்பரா
எழுதறீங்க., சான்ஸே இல்ல., உங்க பதிவை
படிச்சிட்டு ஆபீஸ்ல சிரிச்சிட்டே இருப்பேன்...... "
இப்படி பேசிட்டே இருந்தாங்க..

நான் அமைதியா கேட்டுட்டு இருந்தேன்...

( குறுக்க குறுக்க பேசினா.. புகழ்றது
கம்மியா போயிடும்ல.. ஹி., ஹி., ஹி...! )

அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி நான்
கேட்டேன்...

" ஏங்க... நீங்க எந்த ஊரு..? "

" பொள்ளாச்சி...! "

எனக்கு பொள்ளாச்சின்னு பெயரை
கேட்டதும் பல்ப் எரிய ஆரம்பிச்சிடுச்சு...

" ஏங்க உங்க ஊர்ல ' அசோக் ஹோட்டல் 'னு
ஒண்ணு இருக்காமே..! "

" ம்ம்.. இருக்கு..! "

" அதுல பிரியாணி சூப்பரா இருக்கும்னு
கேள்விப்பட்டேனே..! "

" ஆமாங்க.. செம டேஸ்டா இருக்கும்..! "

" அப்படின்னா.. நான் உங்க ஊருக்கு வந்தா
எனக்கு பிரியாணி வாங்கி தருவீங்களாம்..! "

" ஓ... தாராளமா...! "

"அப்ப அந்த பிரியாணிக்காகவே ஒரு நாள்
நான் பொள்ளாச்சி வர்றேங்க...! "

" வாங்க.., வரும்போது கண்டிப்பா சொல்லிட்டு
வாங்க.. "

" சரிங்க..! "

" உங்களை பார்க்க என் ப்ரெண்ட்ஸ் நாலு
பேர் ஆவலா இருக்காங்க.."

" ஓஹோ அவங்களும் என் ரசிகைகளா..?
ஆட்டோகிராப் எதாச்சும் போட்டு தரணுமா..?!! "

" சே., சே... 150 ரூபா பிரியாணிக்கு,
500 ரூபா செலவு பண்ணிட்டு வர்ற
ஆளை பார்க்கணும்னு ஆசைப்பட்டாங்க..
அவ்ளோ தான்..! "

" ஙே..! "

சே... பொள்ளாச்சியிலயும் ஒரு எழுத்தாளனுக்கு(?!)
மரியாதை இல்லயா..?!!!

# என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்.!!?
.
.

2 Comments:

கார்த்திக் சரவணன் said...

ஹா ஹா ஹா...

வெங்கட் said...

தமிழ் எழுத்தாளன் படற கஷ்டத்தை
எழுதினா நீங்கல்லாம் சிரிப்பா சிரிக்கறீங்க...!!

ம்ம்.. என்ன மாதிரியான சம்முகத்தில் வாழ்கிறோம்...????