அப்போ நான் எட்டாவது படிச்சிட்டு
இருந்தேன்...
ஒரு நாள் எங்க வீதியில நடந்து வந்துட்டு
இருக்கேன்...
அப்போ எதிர்ல ஒரு பொண்ணு
தாறுமாறா சைக்கிளை ஓட்டிட்டு வந்தது..
புதுசா பழகிக்கிட்டு இருக்கு போலன்னு
நானும் ஒதுங்கி ஒதுங்கி நிக்கறேன்..
அப்பயும் சைக்கிள் என் மேல மோதற
மாதிரியே வந்தது...
நான் டக்னு நகந்துட்டேன்.. சைக்கிள்
என் மேல இடிக்கல.. ஜஸ்ட் மிஸ்..
அப்புறம் நான் அந்த பொண்ண பாத்து..
" ஏய்... பாத்து போ புள்ள "-னு சவுண்ட்
விட்டேன்..
அந்த பொண்ணு என்னை பாத்து
முறைச்சிட்டே போச்சு...
சீன் ஓவர்...
அடுத்த நாள்... ஸ்கூலுக்கு போயிட்டு
வந்த என் தங்கச்சி ஒரே அழுகை...
என்ன மேட்டர்னு எங்கம்மா விசாரிக்க...
" அண்ணன் என் ப்ரெண்ட் வனிதாமணியை
கிண்டல் பண்ணிட்டானாம்.... ரவுடி மாதிரி
நடந்துக்கறானாம் "னு போட்டு கொடுக்க..
அம்மா செம திட்டு...
பெண்களை தெய்வமா மதிக்கிற நமக்கே
இந்த நிலைமையான்னு ரொம்ப ஃபீல் பண்ணி
அப்ப நான் முடிவு பண்ணினேன்...
இனிமே இந்த பொண்ணுங்ககிட்ட மட்டும்
பேச்சு வெச்சிக்க கூடாதுன்னு..
சீன் ஓவர்...
அப்புறம் நான் +1 ஜாயின் பண்ணினேன்..
எங்க க்ளாஸ்ல 14 பொண்ணுங்களும்,
பக்கத்து க்ளாஸ்ல 18 பொண்ணுங்களும்
படிச்சாங்க..
ஒரு மாசம் நல்லாத்தான் போயிட்டு
இருந்தது... ஆனா அதுக்கப்புறம் என்ன
ஆச்சுன்னே தெரியல பொண்ணுங்க
என்னைய பாத்தா மொறைக்க ஆரம்பிச்சாங்க..
இதென்னடா வம்பா இருக்கேன்னு
ஒரு பொண்ணுகிட்ட லைட்டா விசாரிச்சேன்...
" நீ வனிதாமணியை கையை புடிச்சி
இழுத்தியாம்ல"-னு சொல்லிச்சு..
" எந்த வனிதாமணி..? " ( எனக்கு மறந்து போச்சு.. )
" நம்ம க்ளாஸ்ல படிக்கிற மேனகாவோட
சித்தப்பா பொண்ணு...! "
அடப்பாவிகளா... இப்ப இந்த அளவுக்கு
டெவலப் பண்ணிட்டீங்களா...??!
சீன் ஓவர்..
அப்புறம் நான் B.Com + MCA படிச்சேன்..
எனக்கு கல்யாண வேலைகள் நடந்தது...
பொண்ணு பக்கத்து ஊரு..
வழக்கம் போல ஒரு நாள்
என் ( வருங்கால ) மனைவிகிட்ட
போன்ல பேசிட்டு இருக்கும் போது...
திடீர்னு ஒரு கேள்வி கேட்டா பாருங்க...
நான் அப்படியே ஆடிப்போயிட்டேன்...
.
.
.
.
" ஏங்க... உங்களுக்கு வனிதாமணி தெரியுமா..? "
( மறுபடியும் வனிதாமணியா..? அவ்வ்வ்...!!! )

