25 February 2014
ஹி., ஹி... கொஞ்சம் எக்ஸ்ட்ரா...!!!
வெண்பொங்கல் பிரசாதம் வாங்க
க்யூல நிக்கும் போது...
வெண்பொங்கல் நெய் மணம் கமகமக்க
இருந்ததா....
எனக்கு உடனே கன நேரத்தில்
உதித்த ஒரு சிந்தனை...
கொஞ்சம் எக்ஸ்ட்ரா பக்தி காட்டுனா...
குருக்கள் நமக்கு ரெண்டு கப்பா
தருவாரோ...!!
சரி எதுக்கும் ட்ரை பண்ணி பார்ப்போம்..
" கோவிந்தா... கோவிந்தா...! "
குருக்கள் என்னை முறைச்சார்...
முறைச்சிட்டு...
" சாமி தரிசனம் பண்ணிட்டு வந்தா தான்
பிரசாதம் குடுப்பேன்... "
( எனக்கு ஆச்சர்யம் தாங்கல. )
" எப்டி சாமி கண்டுபிடிச்சீங்க.. ?!!! "
" அபிஷ்ட்டு... இது பிள்ளையார் கோவில்டா.! "
" பிரசாதம் கொடுத்தவுடனே பெருமாள் கோவில்னு
நினைச்சிட்டேன்.. ஹி., ஹி., ஹி..! "
.
. Tweet
20 February 2014
சல்யூட்... ராம்ராஜ்க்கு சல்யூட்..!!!
போன வாரம் ராம்ராஜ் வேஷ்டி கம்பெனில
இருந்து போன் பண்ணியிருந்தாங்க..
" என்ன விஷயம் சொல்லுங்க..!! "
" சார்.. எங்க புது ராம்ராஜ் வேஷ்டி
டி.வி விளம்பரத்துல நீங்க தான்
நடிச்சி குடுக்கணும்..!! "
" அப்ப விளம்பரத்துல இருந்து ஜெயராமை
தூக்க போறீங்களா..!? "
" இல்ல சார் அவரும் இருக்காரு..!! "
" அவரும் இருக்காரா.??!!! "
" ஆமா சார்... நீங்க வைட் & வைட்ல
வேஷ்டி கட்டிட்டு முன்னாடி நடந்து வருவீங்க..
அப்ப சல்யூட்... ராம்ராஜ்க்கு சல்யூட்னு
தீம் மியூசிக் வரும்..... "
" ஓ.கே..!! "
" அப்ப ஜெயராம் Pant, Shirt போட்டுட்டு
உங்களுக்கு P.A-வா வருவாரு..!! "
ஆனா.. நான் ஒத்துக்கலையே..
# ஆம்பளை P.A-வாம்ல..!!!!
.
.
.
.
17 February 2014
சிறு துளி.. பெரு வெள்ளம்...!
டிஸ்கி : என் மகன் சூர்யா வெங்கட்டப்பன் ( 6th Std )
பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்றதும்.,
பேசியதும்...!!
இங்கே ஒரு சூப்பர் ஸ்டாரை போல
அமர்ந்து இருக்கும் ஆசிரியர்களே....
அமெரிக்காவின் ஜனாதிபதியாக கூட
வர தகுதி உடைய என் இனிய நண்பர்களே..
உங்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்...
" சிறு துளி.. பெரு வெள்ளம்...! "
அதை பத்தி நான் பேசப்போறேன்...
எங்க வீட்ல ஒரு மாமரம் இருக்கு...
அதோட பழத்தை..
நேத்து எங்கப்பா சாப்பிட்டாரு...
இன்னிக்கு நான் சாப்பிடறேன்...
நாளைக்கு என் தம்பி சாப்பிடுவான்...
ஆனா விதை...???
அது எங்க தாத்தா போட்டது...
இப்படித்தான் நானும் ஒரு தடவைக்கு
517 தடவை யோசனை பண்ணி
பாத்துட்டேன்..
இந்த உலகத்துத்துல இருக்குற எல்லா
பெரிய விஷயத்துக்கும்.. ஒரு சின்ன
விஷயம் தான் ஆரம்பமா இருக்கு..
ஒரு தடவை நியூட்டன் மரத்தடியில
உக்காந்தை யோசிச்சிட்டு இருக்கும் போது...
ஒரு ஆப்பிள்.. அவர் தலையில " நங் " னு
விழுந்தது...
நாமளா இருந்தா என்ன பண்ணியிருப்போம்..?
தோட்டக்காரன் வர்றதுக்குள்ள ஆப்பிளை
தூக்கிட்டு ஓடி போயிருப்போம்..!!
ஆனா நியூட்டன்..
ஆப்பிள் ஏன் கீழே விழுந்ததுன்னு ஆராய்ச்சி
பண்ணி.. புவியீர்ப்பு சக்தியை கண்டு பிடிச்சாரு...!
இன்னிக்கு நாம நிலாவுக்கே ராக்கெட் விடறோம்னா..
அதுக்கு காரணம் நியூட்டனுக்கு அன்னிக்கு
வந்த சின்ன சந்தேகம் தான்...
அறிவியலின் சிறுதுளி நியூட்டன்...!
அடுத்து
அன்னை தெரசா ஒரு தடவை இந்தியாவுக்கு
சுற்றுலா வந்தப்ப... நிறைய நோயாளிகள்
கஷ்டப்படறதை பாத்து
அவங்க கண்ணுல தண்ணி வந்துச்சி.,
அவங்களுக்கு சேவை பண்ணனும்னு
மனசு சொல்லிச்சி...
அவங்க எப்பவுமே இங்கே தோன்றதை
( மூளை ) சொல்வாங்க...
இங்கே சொல்றதை ( இதயம் ) செய்வாங்க...!
1948-ல கல்கத்தாவுக்கு மக்களுக்கு
சேவை பண்ண வந்தப்ப அவங்களுக்கு
வயசு 19..
அப்ப அவங்ககிட்ட இருந்ததெல்லாம்
அஞ்சு ரூபாயும்., மனசு முழுக்க அன்பும்தான்..
1952 முதல் ஆதரவற்றோர் இல்லம் ஆரம்பிச்சாங்க..
அது இன்னிக்கு 132 நாடுகள்ல., 500 இல்லமா
மாறி இருக்குன்னா.. அது காரணம் அன்னிக்கு
அன்னை தெரசா கண்ணுல வந்த சிறுதுளி கண்ணீர்...
அன்னை தெரசாவின் கண்ணீர் உப்பாக
இருக்கலாம்..ஆனால் அதுதான் பல
நோயாளிகளின் வாழ்க்கையை இனிப்பாக
மாற்றியது...
அடுத்து
6-வது வரை படித்தவர் தான்
பின் நாட்டையே படிக்க வைத்தார்....
அவர் தான் காமராஜர்..
அவர் தமிழ் நாட்டுக்கு முதலமைச்சரா
இருந்தப்ப நம்ம குழந்தைகள் நல்லா
படிக்கணும்னு ஆசைப்பட்டு 14000 பள்ளிகள்
திறந்தாரு...
ஆனா அப்ப நிறைய குழந்தைகள் வேலைக்கு
போயிட்டு இருந்தாங்க.. காரணம் வறுமை..
அதை பாத்துட்டு பள்ளியில சத்துணவு
திட்டத்தை ஆரம்பிச்சாரு..
நிறைய பேர் அவங்க குழந்தைகளை
பள்ளிக்கு சாப்பிட அனுப்பினாங்க..
சாப்பிட வந்த குழந்தைகள் படிக்கவும்
ஆரம்பிச்சாங்க..
அஞ்சே வருஷத்துல 7% இருந்த தமிழர்களின்
கல்வியறிவு 37% சதவீதமா மாறினது...
இப்ப அது 80%-ஆ வளர்ந்து இருக்கு...
மக்கள் சேவையில் சிறுதுளி காமராஜர்.
இதே மாதிரி..
அகிம்சையின் சிறுதுளி காந்தி.,
புரட்சியின் சிறுதுளி தந்தை பெரியார்...
உழைப்பின் சிறுதுளி அப்துல் கலாம்..
இப்படி சொல்லிட்டே போலாம்..
அதனால கடைசியா ஒண்ணே ஒண்ணு
மட்டும் சொல்லிக்கிறேன்..
நாமளும் ஒரு சிறுதுளி தான்...
" ஏர் ஓட்றமா., ஏரோப்பிளேன் ஓட்றமாங்கறது
முக்கியமில்ல., ஒழுங்கா ஒட்றமாங்கறது தான்
முக்கியம்...! "
இனி பாலைவனத்தில் வீழ்ந்தாலும்
ஈச்ச மரமாக முளைப்போம்..
நன்றி..!!
12 February 2014
ஒரு ஜீனியஸின் கஷ்டம்..!!
நேத்து நானும் , என் Wife-ம்
எங்க ஆன்டி வீட்டுக்கு போயிருந்தோம்...
நான் ஹால்ல உக்காந்து டி.வி
பாத்துகிட்டு இருந்தேன்...
எங்க ஆன்டிக்கு என் மேல பாசம்
அதிகம்...
நான் எப்ப போனாலும் முறுக்கு,
பிஸ்கட், பக்கோடா, ஸ்வீட்னு நிறைய
சாப்பிட குடுத்துடுவாங்க...
ஆனா இன்னிக்கு ஒன்னுமே வரலியா...
என்னடா இது.. வந்த வேலை வேஸ்டா
போயிடும் போல இருக்கேன்னு
நானே கிச்சனுக்கு போனேன்..
அப்ப எங்க ஆன்டி என் Wife-கிட்ட
முடி நிறைய கொட்டுதுன்னு புலம்பிகிட்டு
இருந்தாங்க..
நிறைய முடி இருக்கறவங்க பாப் கட்
பண்ணிக்கறாங்க...
கொஞ்சமா முடி இருக்கறவங்க
இந்துலேகா யூஸ் பண்றாங்க..
Funny Ladies..!!
உடனே நானு...
" இதுக்கு தான் ஆன்டி கெமிக்கல்
கலந்த ஷாம்பூ யூஸ் பண்ணக்கூடாதுன்னு
சொல்றது..!! "
" நான் ஹெர்பல் ஷாம்பூ தாண்டா
யூஸ் பண்றேன்..!! "
" எங்கே காட்டுங்க அதை நான் பாக்கறேன்..!! "
உள்ளே போனவங்க ஒரு ஷாம்பூ
பாட்டிலோட வந்தாங்க... அதை பாத்ததும்
எனக்கு திக்னு இருந்துச்சு...
" ஏன் ஆன்டி.. இதை யூஸ் பண்ணினா
அப்புறம் முடி கொட்டாம என்ன பண்ணும்..? "
" ஏன்டா..? இது நல்ல கம்பெனி தானே..?? "
" நல்ல கம்பெனி தான்.. ஆனா அவன் தான்
அதுலயே தெளிவா எழுதி இருக்கானே..
" Anti - Hairfall..!! "... அப்டின்னா...
ஆன்டியோட முடி கொட்டும்னு தானே
அர்த்தம்..!! "
இதை கேட்டதும் ரெண்டு பேரும்
என்னைய முறைக்க ஆரம்பிச்சிட்டாங்க..
சே.., இந்த உலகத்துல ஜீனியஸா
இருக்கறது ரொம்ப குஷ்டமப்பா...!!!
.
. Tweet
08 February 2014
வாட்ஸ் அப்...!!!
என் Wife-வோட ப்ரெண்ட் ரேகா
புதுசா போன் வாங்கியிருக்காங்க..
அதனால நேத்து அவங்க ரெண்டு பேரும்
Whatsapp-ல ரொம்ப நேரமா சாட்டிங்..
சாட்டிங்.... சாட்டிங்...
அதுவரைக்கும் நல்லாத்தான் போயிட்டு
இருந்துச்சு...
திடீர்னு ரேகா..
" ஏய் நிர்மலா.. அண்ணனுக்கு ( நான்தான் )
Whatsapp இருக்கா..?! "
" இரு பாத்து சொல்றேன்..!! "
" என்னடி இது.. டக்னு சொல்ல வேணாமா..?!! "
" உங்கண்ணனுக்கு மூளை இருக்கானு
கேட்டு இருந்தா டக்னு சொல்லியிருப்பேன்..
நீ Whatsapp இருக்கான்ல கேட்டே..?!! "
" ஙே..!! "
# தட் அடிப்பாவி மொமண்ட்..!!!!
.
. Tweet
05 February 2014
வெச்சிட்டாங்கய்யா ஆப்பு...!!!
Facebook-ல பொண்ணுங்க
சாட் பண்ணினாங்களா..
சாட் பாண்ணினோமா..
நம்பர் குடுத்தாங்களா..
பேசினோமான்னு இருக்கணும்..
அதை விட்டுட்டு பொண்டாட்டிக்கு
Introduce பண்ணி வெக்கறது, அவங்க
ரெண்டு பேரையும் பேச வெக்கறது
இதெல்லாம் செஞ்சீங்க... ஆப்புதாண்டி..
" நிர்மலா.. இதோ பாரேன்... இவங்க
தான் என் FB ப்ரெண்ட் சுஜாதா...!! "
" ஹாய் சுஜாதா..!! "
" ஹாய் நிர்மலா..!! "
அவங்க ரெண்டு பேரும் பேசிட்டு
இருந்தாங்க... பேச்சு அப்படியே
காஸ்ட்யூம் பத்தி திரும்பிச்சு...
" சுஜாதா.. எனக்கு சேரீஸ் தான்
ரொம்ப பிடிக்கும்..!! "
" அப்படியா நிர்மலா... எனக்கும் தான்..!! "
" என்கிட்ட 100 சேரீஸ் இருக்கு..!! "
" என்கிட்ட 320 சேரீஸ் இருக்கு....!!! "
என்ன்னாங்க....................!!!!
# ஆஹா.. மாப்பு வெச்சிட்டாங்கய்யா
ஆப்பு...!!!
.
.
Tweet
Subscribe to:
Posts (Atom)