சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

23 August 2013

கேப்டன் Vs கேப்டன்


கேப்டன் டோனி, கேப்டன் விஜயகாந்தை
சந்திக்க வருகிறார்..

அப்போது டோனி அவரை பாத்து...

" நமஸ்தே ஜி...!! "

" எதோ எனக்கு தெரிஞ்ச இங்கிலீஸ்ல
கேக்கறேன்.. துமாரா நாம் க்யா ஹை..? "

இதை கேட்டதும் டோனி ஜெர்க் ஆகிறார்..

" Mr.விஜய்காந்த்.. எனக்கு தமிழ் தெரியும்.,
நாம தமிழ்லயே பேசலாம்.. நான் டோனி.. "

" ஓ.. நீங்கதான் டோனியா.. ஆமா நீங்க
எதோ இந்தியாவுக்கு ஓல்டு கப் வாங்கி
குடுத்தீங்கன்னு பசங்க சொன்னாங்க.. 

நம்மகிட்ட சொல்லியிருந்தா ஒரு நியூ கப்பே 
செஞ்சி குடுத்திருக்கலாம்.! "

" நீங்க மட்டும் வெள்ளக்காரன் காலத்துல
இருந்திருக்கணும் சார்.... வெள்ளக்காரன்
இங்கிலாந்தையும் நமக்கே எழுதி கொடுத்துட்டு
ஆப்பிரிக்காவுக்கு ஓடியிருப்பான்.. "

" தம்பி நீங்க என்னை ரொம்ப புகழ்றீங்க.. "

" உங்க ரேஞ்ச்க்கு இதெல்லாம் கம்மி கேப்டன்..! "

" ஹி., ஹி., ஹி... அப்படீங்கறீங்க.. சரி
என்னை பத்தி உங்களுக்கு யார் சொன்னா..? "

" இன்சமாம்-உல்-ஹக் சொன்னாரு..? "

" யாரு அது பாகிஸ்தான் தீவிரவாதியா..? "

" சே., சே., முன்னாள் பாகிஸ்தான் கேப்டன்.. "

" கேப்டனா.. அவரும் பாகிஸ்தான்ல நடிகரா..?
இல்ல கட்சி வெச்சி இருக்காரா..? "

" இல்ல.. அவரு கிரிக்கெட் கேப்டன்..! "

" ஆமா அவருக்கு எப்படி தெரியும்...? "

" நீங்க அடிக்கடி பாகிஸ்தான்ல ரோட்டோரமா
தீவிரவாதிகளை திருத்த கேம்ப் போடுவீங்களாம்ல..
அப்ப பார்த்து இருக்காராம்.. "

" ஓ.. நான் வேற கொஞ்ச நாளா அங்கே
போகல... இப்ப எப்படி இருக்காம் பாகிஸ்தான்..? "

" அங்கங்கே ' கேப்டன் தீவிரவாதிகள் சீர்திருத்த
பள்ளி ' ஆரம்பிச்சி இருக்காங்களாம்... அதனால
முன்ன மாதிரி பிரச்னை இல்லையாம்.., "

" அப்படியா..? "

" ஆமா.. எவனாவது சின்னதா வாலாட்டினா கூட
நீங்க மூச்சு விடாம மூணு மணி நேரம் பேசின
டிவிடி-ஐ போட்டு காட்றாங்களாம்.. அவனுங்க
அப்படியே மயக்கம் போட்டு , கோமா ஸ்டேஜ்க்கு
போயிடறாங்களாம்..! "

" ம்ம்.. ஆனா இன்னும் பார்டர்ல தகராறு
பண்ணிட்டு தான் இருக்கானுங்க போல.. "

" யெஸ் Mr.விஜய்காந்த்.. அவனுங்களுக்கும்
நாம சாவு பயத்தை காட்டணும்.. அதுக்கு தான்
உங்களை மீட் பண்ண வந்தேன்...! "

" என்ன பண்ணலாம்..? நான் வேணா என்
துப்பாக்கியை ரெடி பண்ணிக்கட்டுமா..? "

" அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..
பாகிஸ்தான் பார்டர்ல ஒரு மீட்டிங் அரெஞ்ச்
பண்ணியிருக்கு.. நீங்க வந்து பேசுங்க போதும்..! "

" ??!?!??! "




---------------------------------------------------------------------------

டிஸ்கி : திரு. வெங்கடேஷ் ஆறுமுகம் அவர்கள் 
Facebook-ல் நடத்திய " எழுத்தாளர் சுஜாதா நினைவு 
கற்பனைத்திறன் போட்டி - 3 "-ல் எனக்கு முதல் பரிசு 
வாங்கி தந்த என் படைப்பு தான் இது..

இந்த வார தலைப்பு : இவர்கள் சந்தித்தால்...!

.
.

2 Comments:

Unknown said...

மகிழ்வித்து மகிழ் என்றும் சொல்லலாம் அல்லவா?

vinu said...

vaalththukkal